தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Oct 31, 2009

'வாசகர் பர்வம்' எஸ். ராமகிருஷ்ணன்

















புத்தகங்கள் மேல் இவர் கொண்ட காதல், எவ்வளவு தூரமானாலும் இவரை பயணப்பட வைக்கிறது. இவர் வாழ்வோடு பயணங்கள் கலந்திருக்கிறது. இவர் தன் வாழ்க்கை பயணத்தில் கடந்து வந்த சில மறக்கமுடியாத மனிதர்களை அறிமுகப்படுத்துகிறார் .


புத்தகத்தை மின்னஞ்சலில் அனுப்பிய திரு ஜனா அவர்களுக்கு நன்றி.



Click to download.

Oct 9, 2009

ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள் ப்ரியன்












காதலி, மழை, காதலன், கவிதை ஆகிய நான்கும் ஒன்றாய்க் கலந்த பிரிக்க முடியாக் கலவையே இந்தத் தொகுப்பு.


நின்ற பின்னும்

சிறிது நேரம்

இலை தங்கும் மழைப்போல

நின்றுபோன இடத்தில் எல்லாம்

கொஞ்சநேரமாவது தங்கிச்

செல்கிறது அழகு.



எப்போதிலிருந்து இப்படி எழுதுகிறீர்கள்

என்றாய்

நீ மழையில் நனைவது

கண்டதிலிருந்து என்றேன்

ச்சீ என வெட்கப்பூ பூத்தாய்

அடுத்த மழைப் பெய்யத் தொடங்கியது

நீயும் நனையத் தொடங்கினாய்

நானும் இன்னமும் அழகாய் எழுதத் தொடங்கினேன்.



எவ்வளவு பத்திரமாய்

நடந்தாலும்

உன்னையும் அறியாமல்

வழியெங்கும்

பெய்துகொண்டே

செல்கிறது

உன் அழகுமழை.



ஆகா!!! முழுக்க முழுக்க காதலும் கவிதையும் மழையாய்ப் பொழிகின்றன.



ஜன்னலில் பார்த்ததைவிடவும்

பக்கத்தில் பார்த்தல்

அழகு!

நீயும்!

மழையும்!




வார்த்தையாகக் கூட இல்லை

ஒரு எழுத்தாகக் கூட

இல்லாதவனை

ஒரு கவிஞனாய் மாற்றிய

பெருமை

உனக்கும்

மழைக்கும் மட்டுமே!



யாரைத்தான் காதலிக்கிறார் இவர்? மழையையா தன் காதலியையா?



மழை ரசித்தாலும்

உனை ரசித்தாலும்

நேரம் கடப்பதும் தெரிவதில்லை

உயிர் கரைந்து

ஓடுவதும் தெரிவதில்லை.


Click to download.





வண்ணத்துப் பூச்சியாய்.... ஜெய்சக்தி














தீபாவளியும் பொங்கலும்
வாழ்த்துக்களால்
ஞாபகப் படுத்தப் படுகின்றன;

வசந்தகாலத்தின் பெளர்ணமி
நிலவு இப்போது
தேய்பிறையில்;

காலத்தால் நிலையாமை
கட்டாயமாக‌
கற்பிக்கப் பட்டாலும்;

நிலையாக இருக்கும்.
ஆழ்கடலின் அடிமணலாய்
உன்
நினைவுகள்!.

Click to download.

தப்புத் தப்பாய் ஒரு தப்பு ராஜேஷ்குமார்













ராஜேஷ்குமார் - பி.எஸ்.சி., பி.எட்., படித்துவிட்டு, பள்ளிக்கூட ஆசிரியராக இருந்து படைப்பிலக்கியப் பாதைக்கு வந்தவர். 22 ஆண்டுகளாக நாவல் உலகில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள இவர், க்ரைம் நாவல் என்றால் உடனே நினைவுக்கு வருபவர். 1000 நாவல்களுக்கும் மேல் எழுதிக் குவித்துள்ள இவரின் ஆயிரமாவது நாவல் "டைனமைட்-98'.

தினமணி கதிருக்காக இவர் படைத்தளித்த தொடர்கதைதான் "தப்பு தப்பாய் ஒரு தப்பு'. தொடர்ந்து 26 வாரங்கள் வெளிவந்து வாசகர்களை மகிழ்வூட்டிய இத் தொடர்கதை புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது இன்டர்நெட் வாசகர்களுக்காக.

Click to download.
இருளுக்குபின் வரும் ஜோதி
















போய்வருகிறேன் என்று
சொன்னவுடன்
என்னை விட்டுவிட்டு
மனதைப் பிடித்து
வைத்துக்கொண்டாயே
இது என்ன நியாயம்?.



Click to download.

Oct 2, 2009

'எண் ஜோதிடம்'















ஒருவர் பிறந்தபோது பதிவு செய்த பெயர் எண்ணாக மாற்றப்படுகிறது.

1 2 3 4 5 6 7 8 9
A B C D E F G H I
J K L M N O P Q R
S T U V W X Y Z

இந்திய எண் சோதிடர்கள் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு கோளை ஒதுக்கி பலன் சொல்கிறார்கள். 1 - ஞாயிறு, 2 - கேது, 3 - குரு, 4 - இராகு, 5 - புதன், 6 - சுக்கிரன் (வெள்ளி ) 7 - சந்திரன், 8 - சனி, 9 - செவ்வாய்.

எண் சோதிடர்கள் பிறந்த திகதியையும் பெயரையும் கூட்டி வருகிற எண் அலையதிர்வுகளை (vibrations)எழுப்புவதாகச் சொல்கிறார்கள்.

சிலர் எண் சோதிடம் அறிவியல் அடிப்படையில் அமைந்த கலை என்கிறார்கள்!

எண்களை வைத்துக் கொண்டு ஒருவரது குணம், நடை, திறமை, வாழ்க்கையின் நோக்கம், துணையை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும், வாணிகம் எப்போது தொடங்க வேண்டும், என்பதை எல்லாம் கணித்துச் சொல்கிறார்கள்

உலகத்தில் இன்று வாழும் மக்களை 9 எண்களில் எண்சோதிடர்கள் அடக்கி விடுகிறார்கள். இதனால் ஒரே எண்ணில் உள்ள மக்களது விதி ஒரேமாதிரி இருக்க முடியுமா?

"புத்தகத்தை மின்னஞ்சலில் அனுப்பிய திரு அவர்களுக்கு நன்றி"

Click to download.



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Blog Archive

Popular Posts