தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

May 22, 2010

கற்பனையோ... கைவந்ததோ... காஞ்சனா ஜெயதிலகர்.


வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று

வசப்படவில்லையடி

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு

உருண்டயும் உருளுதடி

காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால்

ஒரு நிமிஷமும் வருஷமடி

கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்

ஒரு கலக்கமும் தோன்றுதடி - இது

சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்

வாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்

வார்த்தையில் உள்ளதடி.

Click to download.



சுவாமி விவேகானந்தரின் மணிமொழிகள்

எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால்களில் நிற்கும்படி செய்கிறதோ, அதுதான் உண்மையான கல்வியாகும்.























நமது நிலைக்கு நாமே காரணம்!.

நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்கவேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நாம் நம்முடைய தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை.

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி வெற்றிக்கு ஆதாரம்!.

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும். தன்னுடைய சொந்த சுக வசதிகளை மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்திலும் கூடஇடம் கிடைக்காது.


தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் நமது சக்தியைச் சிதறவிடாமல். அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கபூர்வமான பணிகளில் நாம் ஈடுபடுவோமாக. யார் ஒருவர் எதைப் பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ. அதை அவர் பெறாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் முடியாது.


இதுவரை பதிவிட்ட மென்புத்தகங்களில் எனக்கு மனதில் திருப்தியும் நிறைவும் தந்த பதிவு இதுதான். மனம் நிம்மதி இல்லாமல் மிகுந்த சலனத்துடன் இருக்கும்போது படித்துப்பாருங்கள், சத்தியமாய் வேறோர் நிலைக்கு இந்த புத்தகம் நம்மை எடுத்துச்செல்லும்.




Click to download.



தமிழிஷில் ஓட்டிட்டு அதிகப்படியானோர் நம்மைப்போல் பயனுற வழிசெய்யுங்கள்.

May 6, 2010

மழலையர்களுக்கான சிறுகதைகள்.














மாணவர்களுக்கான சிறுகதைகளை மாணவர்களே எழுத வேண்டும் என்று எண்ணி 4 5 ஆம் வகுப்பில் தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளியில் படிப்பவர்களிடம் சொன்னதன் விளைவாக உருவானதே இந்தக் கதைகள்.

சிறுவர்களின் மனதில் இயல்பாக எழுகிற நினைவலைகளுக்கு, வடிவம் தந்து, ஒவ்வொரு கதையின் இறுதியிலும் ஒரு வழிகாட்டுதலை இணைத்து உருவாக்கப்பட்டவையே இக்கதைகள். நன்றி திரு பொள்ளாச்சி நேசன்.



இதில் அமைந்துள்ள எளிதான வரத்தைப் பிரயோகங்களும், இயல்பான குழந்தைகள் பேசும் மொழிகளும் நாம் நம் குழந்தைகளிடம் கதை கேட்பதுபோல் உள்ளது. கண்டிப்பாக குழந்தைகள் விரும்பிப் படிப்பார்கள்.

மழலையர்களுக்கான சிறுகதைகள்.

இத்தொகுப்பில் 21 சிறுகதைகள் உள்ளன. இதுபோல இன்னும் நிறைய சிறுகதைகளை மாணவர்களிடமிருந்து மாணவர்களுக்காக உருவாக்கவேண்டும்.





Click to download.
கூல்! ஆண்-பெண்.. அறியவைக்கும் உளவியல் தொடர்! சி.ஆர்.எஸ்.















.....இப்போது கல்வி, குடும்பம், சமுகம், வயது என்று பல விதங்களிலும் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்தில் விழுபவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் கல்லூரி மாணவ மாணவியர்தான். அதிலும் அவர்களின் மிக முக்கிய பிரச்னையாக இருப்பது ஆண்- பெண் நட்பு.

"ரெண்டு நாள் பேசினதுமே 'லவ் யூ' சொல்லிடுறாங்கலே தவிர, உண்மையாக நண்பனா யாருமே இல்லை" என்று வருத்தப்படும் பெண்களைப் போலவே, " நான் பார்க்கறதுக்கு ரொம்ப சுமாரா இருக்கேன். அதனாலேயே எனக்கு பாய் ப்ரென்ட் கிடையாது" என்று புலம்புகிற பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்......

....எதிர்ப்படும் எல்லா ஆண்களையும் துல்லியமாக ஆராய்ந்து இவன் இவ்வளவுதான் என்று மதிப்பெண் போட்டு அவமதிப்பது பழக்கமாக இருந்திருக்கிறது ஷர்மிளாவுக்கு. சைட் அடிப்பது, காதல் கடிதம் கொடுப்பது என்று அவர்கள் சராசரி ஆண்களாக நடந்து கொள்ளும் போதெல்லாம் விலகி நின்று கிண்டலடித்திருக்கிறாள்.

அந்த சராசரிகளை எல்லாம் தாண்டிய ஒரு அசாத்திய புருஷனுக்காக அவள் காத்திருக்கிறாள். அந்த அசாத்திய புருஷன் வந்து இவளது அறிவை வென்று நிற்பான்... சொல்லிலும் செயலிலும் இவளை ஆளுவான் என்பது ஷர்மிளாவின் கனவு. பாவம் அவன் கணவன்.. அந்த நல்ல மனிதன் ஒரு சராசரி மனைவியை எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறான்.....

டாக்டர். சி. ராமசுப்ரமணியன், மதுரையைச் சேர்ந்த பிரபல மனநல மருத்துவ நிபுணர். சி. ஆர். எஸ். என்று அன்போடு அழைக்கப்படும் இவருக்கு இத்துறையில் 27 வருட அனுபவம் உள்ளது.

மதுரை மருத்துவக் கல்லூரியில் மனநல மருத்துவத் துறையின் தலைவராகப் பணியாற்றுகிறார். எண்ணற்ற கல்வி நிறுவனங்களில் மனநல ஆலோசனைகள் வழங்கி உரையாற்றியிருக்கிறார். இன்றைய இளம் தலைமுறையினரின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் ஸ்பெஷலிஸ்ட் இவர்.

அனந்த விகடனின் இந்த தொடரை kricons முதன்முதலாக அவரது தளத்தில் கொடுத்திருந்தார். இப்போது நமது வலைப்பக்கத்திலும். நன்றி kricons!!..




Click to download.


முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts