தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Dec 30, 2008

ரோஜாமுள் ரமணிசந்திரன்













உங்களுடைய 35 நாவல்கள் படித்திருக்கிறேன். எத்தனை அற்புதமானது. உங்களுடைய பெயரை எங்கு எந்தப் புத்தகத்தில் பார்த்தாலும் சந்தோசம். உங்கள் புத்தகத்தைப் படித்தாலும், படித்ததை மீண்டும் படிக்க ஆவல்.


Click to download.

Dec 28, 2008

எல்லோருக்கும் ஆசை உண்டு ரமணிசந்திரன்













திருமதி ரமணிசந்திரனின் கதைப் புத்தகம் கைக்குக் கிடைத்து விட்டால் என்னைப் பசியோ, தாகமோ, துக்கமோ, நெருங்காது. அதில் என்னையே அறியாமல் கண்ணீர் விட்ட எத்தனையோ இடங்கள், அதேபோல் அகமகிழ்ச்சியால் திருப்தி அடைந்த எத்தனையோ இடங்கள்.

Click to download.
அண்டத்தின் அற்புதங்கள்3









ஏகவியல் என்பது அறிவியல் பெருமக்கள் எதிர்காலத்தில் அடையத்துடிக்கும் முடிவான உண்மை. அதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம்.

17 ம் நூற்றாண்டில் நியுட்டன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது எனக் கொள்ளலாம். உலகில் நிகழும் இயக்கம், விண்மீன்கள் இவற்றின் இயக்கம் அனைத்தும் ஒரே விதிக்குள் உட்பட்டு நிகழ்கிறது என்று கூறியுள்ளார் நியூட்டன்.

மிக அழகான படங்களுடன் படிப்பதற்கு தூண்டுவதாக உள்ளது.


Click to download .

Dec 25, 2008

ஆகாயம் காணாத நட்சத்திரம் இந்திரா சௌந்தரராஜன்












எழுத்துக்களில் பகுத்தறிவு மற்றும் ஆன்மீக சிந்தனைகளின் தாக்கம் அதிகம் இருக்கும். எல்லா அறிவியல் உண்மைகளையும் எளிய தமிழில் எளிய உரைநடையில் மற்றவருக்கு கதையுடன் சேர்த்து விளக்குவது அவரது தனிச்சிறப்பு.



Click to download.
என் சரித்திரம் உ. வே. சாமிநாதையர்.













உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையர் சுருக்கமாக உ.வே.சா சிறப்பாக தமிழ் தாத்தa. பலராலும் மறக்கப்பட்டு அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அவற்றை அச்சிட்டு பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குச் சேவை புரிந்தவர்களுள் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவராவார். இவரது அச்சுப்பதிப்பிற்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையும், செழுமையும் எல்லோராலும் அறியும்படி வெளிக்கொணரப்பட்டது.

உ.வே.சா அவர்கள் 90 ற்கும் அதிகமான புத்தகங்களை அச்சுப்பதிப்பதித்தது மாத்திரமன்றி 3000 ற்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகள், கையெழுத்துப்பிரதிகள் ஆகியவற்றை சேகரித்தும் இருந்தார்.

உ.வே.சாமிநாதையர் தனது சுயசரிதத்தை என் சரித்திரம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார், இது 1950ல் தனிப் புத்தக வடிவம் பெற்றது.

Click to download.

Dec 14, 2008

தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்













வண்ணதாசன்.

வண்ணதாசன் புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், எஸ்.கல்யாணசுந்தரம். இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.

அசோகமித்திரன்

அசோகமித்திரன், தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து.

ஜி. நாகராஜன்

பாலியல் ஒடுக்குமுறை குறித்து தீவிர விவாதங்களை உருவாக்கும் எழுத்து நாகராஜனுடையது. கல்லூரிப் பேராசிரியராக வாழ்வைத் துவக்கினார். போதையின் பிடியில் அகப்பட்டு நாற்பது வயதிற்குள் இறந்துபோனார்.

கி. ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.


Click to download.

இந்து மதமும் தமிழர்களும் தந்தை பெரியார்








திராவிடர்கள் இந்துக்கள் அல்ல என்பது எமது கருத்தாகும், இந்தக் கருத்தை ஆதாரமாக வைத்தே திருவாரூரில் கூடிய ஜஸ்டிஸ்கட்சி மாகாண மகாநாட்டில் "திராவிடர் ஆகிய நாம் இந்துக்கள் அல்ல " என்றும், மக்கள் எண்ணிக்கையைக் கணக்கு எடுக்கும் சென்செஸ் ரிபோர்ட்டில் நாம் ஒவொருவரும் திராவிடர் என்று பெயர் கொடுக்க வேண்டுமே ஒழிய இந்துக்கள் என்று பெயர் கொடுக்கக் கூடாது என்றும் தீர்மானம் செய்திருக்கிறோம்.
இது தந்தை பெரியார் அவர்களுடைய புரட்சிகரமான கருத்தாகும்.
Click to download.
வெண்ணிலவு சுடுவதென்ன ரமணிசந்திரன்












I am also a fan of RC. But we can predict her story easily still like her writings. Me and my mom used to read together... I read fast and cann't wait for my mom and turn page fast & irritate my mom.

Click to download.

Dec 3, 2008

உரிமை உறங்குகிறது! லக்ஷ்மி








இவரும் பெண்களுக்கு மிகப்பிடித்தமான ஒரு எழுத்தாளர்.
இவருடைய நாவலை எங்கள் ஊரில் ஒரு நாள் வாடகைக்கு எடுத்து படிப்பதற்கென்று முன்பு ஒரு கூட்டமே
இருந்தது.

தேவநாதன் கெளரி இரண்டு குழந்தைகள் என்று ஒன்பது ஆண்டுகளாக அழகிய நதியாய் ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் நளினா வருகிறாள், புயல் வீசுகிறது.

இறுதியில் புயலுக்கு பின் அமைதி தானே.

Click to download.

Nov 30, 2008

எனது சிந்தை மயங்குதடி ரமணிசந்திரன்











இந்த ஒளி நீதான் என்று தெரிகிறது எனக்கு வேண்டியது நீதான் என்பதும் புரிந்துவிட்டது ஆனால் ஏனோ பக்கத்தில் வராமல் அவ்வளவு தூரத்திலேயே நின்றாய்! மதி மதி என்று கதறிப் பார்த்தேன் என்குரல் உன் காதுகளை எட்டவே இல்லை.

என்னதான் ஆனது.....

click to download

Nov 20, 2008

அங்கே இப்ப என்ன நேரம் அ.முத்துலிங்கம்













நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அளவு எல்லாம் இட்டுச் செல்கின்றது.

வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக சிந்திக்க வைப்பதாக ஆட்கொல்லுவதாக சொல்லும் அ.முத்துலிங்கத்தின் வார்த்தைகள் நம்மையும் அதேவிதமான பதிப்புக்கு உள்ளாக்குகின்றன.


இங்கே கிளிக்கவும்.

Nov 15, 2008

ஏற்றம் புரிய வந்தாய் ரமணி சந்திரன்










வாசகர்களில் ரமணி சந்திரனுக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கிறது. குறிப்பாக அவருக்கு பெண் வாசகிகள் எராளம்.

என்னிடம் ரமணி சந்திரனின் நாவல்கள் சில இருக்கிறது. ஒன்று ஒன்றாக அவற்றை நான் இங்கு தருகிறேன்.


இங்கே கிளிக்கவும்.

Nov 8, 2008

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் பாகம் 2







ஆனந்த விகடனில் தொடராக வந்து சக்கை போடு போட்ட தொடர் இது. சுவாமி சுகபோதானந்தா அவர்களின் வித்தியாசமாக விரியும் வாழ்க்கை பற்றிய பார்வையும்... நம்பிக்கை தடவிய வார்த்தைகளும்...

இது இரண்டாவது பாகம்.
இங்கே கிளிக்கவும்!.

Nov 5, 2008

வி .இ .லெனின் எழுதிய " கூட்டுறவு குறித்து "










முன்னேற்றப் பதிப்பகம் மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஆகியோரது கருத்துக் கருவூலங்களை வெளியிடுவதுடன் மார்க்சிய லெனினியத்தைப் பயிலுகின்றவர்களுக்கு உதவுகின்ற சிறு பிரசுரங்களையும் வெளியிட்டுவருகிறது.

இப்பிரசுரத்தின் ஆசிரியர் கூட்டுறவுத் துறையில் பிரபலாமான நிபுணர். அவர் இப்பிரசுரத்தின் லெனின் எழுதிய "கூட்டுறவு குறித்து" என்னும் கட்டுரையின் சாராம்சத்தையும் விவசாய வர்க்கம் புதிய வாழ்க்கைக்கு முன்னேறுவதற்கான பாதைகளை வகுத்துக்கொடுப்பதில் அதன் முக்கியத்துவத்தையும் விள்க்கியிருக்கிறார்.


இங்கே சொடுக்கவும்.

Oct 30, 2008

அத்தனைக்கும் ஆசைப்படு











வாழ்க்கையில் சில மகத்தான விஷயங்கள் நம்முடைய பெரும் முயற்சி இல்லாமலேயே நமக்குக் கிடைத்து விடுகின்றன அப்படி எங்களுக்குக் கிடைத்த ஒரு ஆனந்த வரம்தான் சத்குரு ஜக்கி வாசுதேவின் அறிமுகம்.

அவருடைய யோகா வகுப்புகளில் எங்களுக்குக் கிடைத்த அற்புத அனுபவம், எங்களுக்குள் பல மாற்றங்களை நிகழ்த்தியது. இறுக்கமாக மூடியிருந்த பல மனக் கதவுகளைத் திறந்துவிட்டது. நட்பும் நம்பிக்கையும் தழைத்தோங்கின. ஆனந்தமும் அமைதியும் நண்பர்களாயின. இந்த பூமியில் நாம் சும்மா வசிக்க வரவில்லை, வாழ வந்திருக்கிறோம் என்பதை சத்குருவின் வார்த்தைகள் எங்களுக்கு அழுத்தமாக உணர்த்தின.

தடைகளை வென்று, நீங்கள் ஆசைப்பட்டதை அடைவதற்கான எளிய வழிமுறைகளை சத்குரு உங்களுக்காவே வழங்கிடயுள்ளார். அள்ளிக் கொள்ளுங்கள். -சுபா

இங்கே சொடுக்கவும்.

காத்திருக்கிறேன் சுபா















இண்டர்நெட்டிற்காக எழுதப்பட்டு இண்டர்நெட்டில் வெளியிடப்படும் முதல் தமிழ் நாவல்.


சுபாவின் நாவல்களை இதுவரை புத்தகத்தில் படித்துவிட்டு இப்போது e-book ஆக படிப்பது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது.


Click to download.
Sujatha collections -3








Another collections of sujatha's best short stories.

அம்மா மண்டபம், அரங்கேற்றம், அரிசி, கரஃப்யூ, எல்டொராடோ, எங்கே என் விஜய், and காரணம்.


Click to download.

Oct 27, 2008

'பெண் ஏன் அடிமையானாள் பெரியார்..














இந்தப் புத்தகம், முதன்முதலில் எழுதப்பட்டது 1942ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில். அறுபது ஆண்டுகள் கழிந்து, சுதந்திர இந்தியாவில் கூட புத்தகம் பேசும் பிரச்சனைகள் இன்றும் மாறாமல் இருப்பது தான் வேதனை.

வண்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது, வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிகளுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை.

நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில், ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வண்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்

Click to download.

Oct 26, 2008

அயல் சினிமா எஸ். ராமகிருஷ்ணன்










உலக சினிமாவை அலசும் இவரை அனைவருக்கும் பரிச்சயம் இருக்கும்.

எஸ். ராமகிருஷ்ணன் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர் நவீன தமிழ்ச் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கியவர்.

சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக்கள், கட்டுரைகள், நாடகங்கள், திரைப்பட கதை-வசனங்கள் என்று தொடர்ச்சியாக தமிழில் இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.

விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர் சொந்த ஊர். அப்பா சண்முகம் கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி. புத்தகங்கள் படிப்பதில் தீவிர விருப்பம் கொண்டவர்.

உலக சினிமாவின் புதிய திசையை அடையாளம் காட்டும் இந்நூல் கொரியா, பிரான்ஸ், ருஷ்யா, ஹாங்காங்க், மெக்சிகோ, சீனா, இத்தாலி, ஸ்பெயின், நியூசிலாந்து, அமெரிக்கா என பத்து முக்கிய தேசங்களின் இளம் இயக்குனர்களையும் அவர்களது முக்கிய திரைப் படங்களையும் ஆராய்கிறது.

Click to download.

Oct 24, 2008

தமிழில் கவிதைகள் படைப்பாளி unknown










எனக்கு தெரியும்
நீ விரும்புவது என்னையல்ல...
என் கவிதைகளைத்தான் என்று...
ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகளல்ல‌
நான் தான் என்று!!!


Click to download.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் ! ‍பாகம் 1
சுவாமி சுகபோதான‌ந்தா








ஆனந்த விகடணில் வந்த தொடர். மிகுந்த வரவேற்பு பெற்ற இவர் ஒரு வித்திய‌ச‌மான‌வ‌ர்.
...........................
நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி "ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும்?"
............................
இன்று பலரின் வீட்டில் கணவன் மனைவி உறவு என்பது உயிரற்ற கல் மாதிரி இருக்கிறது ! ஆனால் இதில் விசித்திரம் என்னவென்றால், நமது நாட்டின் ரிஷிகள் கற்களில் செதுக்கி வைத்த கஜீரஹோ சிலைகளில் கூட காதல் ரசம் சொட்டுகிறது! உயிர் இருக்கிறது!

.................................


part 1.


Click to download.
குழந்தைகள் பாடல்கள்














உங்கள் குழந்தைகளுக்காக நாம் கேட்டு மகிழ்ந்த பாடல்கள் சொல்லிக்கொடுக்க நினைத்தாலும் மறந்துவிட்டதா இதோ நமது நினைவுகளை மீட்டுக்கொண்டு வருவதற்காக இந்த பாடல்கள்.


அம்மா இங்கே வா வா!
ஆசை முத்தம் தா தா!
...................

நிலா நிலா ஓடி வா
...................

ஒன்றும் ஒன்றும் இர‌ண்டு

......................

ம‌ற்றும் ப‌ல‌

Click to download.
த‌ண்ணீர் தேச‌ம்
க‌விஞ‌ர் வைர‌முத்து











செருப்புக் க‌டித்துச்
செத்துப்போகும்
தேக‌ங்க‌ளை
வ‌ள‌ர்த்துவிட்டோம்.
த‌ந்திவ‌ந்தால் இற்ந்துபோகும்
இத‌ய‌ங்க‌ளை
வ‌ள‌ர்த்துவிட்டோம்.
………

அவள் அவனை உதறி
எழுந்தாள். ஊடல் கொடி
பிடித்தாள்.

உண்மையில் நீங்கள்
நேசிப்பது கடலையா?‍
என்னையா?
........

இனிய‌வ‌ர்க‌ளே.

ஒரு வேள்வி செய்தேன்.
வ‌ர‌ம் வ‌ந்திருக்கிற்தே
இல்லையோ வேள்விக்கு
செல‌வான‌ விறகு நெய்யும் நிஜ‌ம்.

இந்த‌த் த‌ண்ணீர் தேச‌த்திற்காக‌
கொங்குதேர் வாழ்க்கை
அஞ்சிறைத் தும்பியாய் நான்
அறிவுசேர்க்க‌ அலைந்த‌து நிஜ‌ம்.
த‌மிழுக்கு இது புதிய‌து
என்று தமிழ‌றிந்தோர் சில‌ரேனும்‌

த‌குதியுரை சொன்னால்,
இத‌ற்காக‌ நான் ஓராண்டாய்
இழ‌ந்த‌ ச‌க்தி ஒரு நொடியில்
ஊறிவிடும்.

எந்த‌த் தொட‌ருக்கும் நான்
இத்த‌னை பாடு ப‌ட்ட‌தில்லை
.....

க‌விஞ‌ர் வைர‌முத்து



Click to download.

Oct 19, 2008

சிவாஜிராவ் to சிவாஜி









சிவாஜிராவ் என்ற இளைஞன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகி, இன்று 'சிவாஜி'யாக அறியப்படுகிற நிலை வரையிலான மாற்றங்களை எத்தனையோ பேர் எத்தனையோ கோணங்களில் தொட்டுப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், ஒரு சிகரத்தின் எல்லா அங்குலங்களையும் முழுமையாகத் தொட்டு முடித்துவிட்டதாக யாரும் சொல்ல முடியுமா?

'கெளரவம்' படத்தில் 'ரஜினிகாந்த்' என்ற பாத்திரமாக நடித்துச் சிறப்பித்தார் சிவாஜி.


இன்று ரஜினிகாந்த் 'சிவாஜி' என்ற பாத்திரமாக நடிக்கிற ஆச்சர்ய ஒற்றுமை...!.

'ரஜனி' என்ற சொல்லுக்கு இருட்டு, ஸ்த்ரீ, காய்ந்த மஞ்சள், மண்கலம் என்றெல்லாம் அர்த்தம் சொல்கிறது வடமொழி அகராதி. இதில் கருப்பையே தன் கவர்ச்சியாகக் கொண்டதால்தான் 'இரவின் நாயகன்' என்ற பொருள்பட 'ரஜினிகாந்த்' என்ற பெயர் வந்தது ரஜினிக்கு!.

'ஸ்டைல்' என்ற வார்த்தைக்கும் அகராதியில் அர்த்தங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் தமிழக சினிமா ரசிகர்களுக்கு ஒரே அர்த்தம் ..அது ரஜினி!.



Click to download the file.

Oct 9, 2008

முல்லாவின் கதைகள்










முல்லா நஸ்ருத்தீன் என்பது அவருடைய முழுபெயர். இதில் முல்லா என்பது அறிக்ஞர் ‍கல்விமான் என்பதைக் குறிக்கும் சிறப்பு அடைமொழியாகும். இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் ஆவார்.

முல்லா நஸ்ருத்தீன் சிற‌ந்த கவிஞர், சிறந்த நகைச்சுவையாகக் கவிதை எழுதுவதிலும் பேசுவதிலும் வல்லவர் ஆவார். இவருடைய இந்த புகழுக்கு அவர் எழுதிய கதைகள் சான்றாகும். இவருடைய கதைகள்யாவும் அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை ஒட்டியதக இருந்தது.


Click to download.


முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Blog Archive

Popular Posts