தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Feb 22, 2010

நித்தமும் உன் நினைவு காஞ்சனா ஜெயதிலகர்
















வெளிநாட்டில் தம் சொந்தங்களை விட்டு வெகுதூரம் வாழும் நம் தமிழ் நெஞ்சங்களுக்காக ஏராளமான சமையல் குறிப்புகளை அள்ளிக்கொடுக்கும் தளங்கள் இருக்கிறது. அதில் மிகவும் முக்கியமானது அறுசுவை டாட் காம் இனிய தமிழில் ஒரு சமையல் இணையதளம்.

என்னதான் இணையதளத்தில் படித்தாலும், குடும்பங்களை நாட்டில் விட்டுவிட்டு தனியாக இருக்கும் பேச்சிலர்களின் சமையல் தனி ரகம் தான்.

அதுவரை சமையலறைப் பக்கமே போகாமல் இருந்த நான், முதல் முதலாக குடும்பத்தை விட்டு தனியாக செல்லும்போது சாப்பாட்டிற்கு என்ன செய்வேன்
என்பதே மிகப்பெரிய விசயமாக இருந்தது. ஒன்றுமே தெரியாத தம்பி எளிதாக சமையல் செய்ய என் சகோதரி கொடுத்த சில குறிப்புகளை மற்றவர்களுக்கு
பயன்படும் என்ற எண்ணத்தில் இல்லாவிட்டாலும் என் சொந்த சேமிப்பிற்காக பதிவிடுகிறேன்.


ரவா தோசை.

ரவை ஒரு டம்ளர் எடுத்து அரைமணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் அதே அளவு மைதா மாவு எடுத்து உப்பு சேர்த்து தோசை பதத்திற்கு நன்கு கரைத்துக்கொள்ளவும். ரவையை நன்கு பிசைந்துவிட்டுப் பின் மைதா சேர்த்தால் நன்றாக இருக்கும். ஒரு மிளகாய், இஞ்சி, கடுகு உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து மாவில் கொட்டி கிளறிவிட்டு தோசை செய்தால் நன்றாக இருக்கும். இதுவரை செய்து பார்த்திராத பேச்சிலர்கள் முயற்சித்துப் பாருங்கள் எளிதாக செய்யலாம்.



நித்தமும் உன் நினைவு காஞ்சனா ஜெயதிலகர்
Click to download.

Feb 9, 2010

சதுரகிரி யாத்திரை












சதுரகிரி மலைக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கும் ஊரில் பிறந்திருந்தாலும், சிறுவயதில் இரண்டு மூன்று முறை சென்றுவந்திருந்தாலும் அதனுடைய உண்மையான சிறப்புகளையும் அற்புதங்களையும் அறிந்ததில்லை.


சமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோது சதுரகிரியின் சிறப்புகளை சொல்லும் ஒரு புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. அதுமுதல் யார் சதுரகிரியின் சிறப்புகளை சொன்னாலும் எங்களுருக்குப் பக்கத்தில் தான் இருக்கிறது என்று சொல்லுவதில் ஒரு இனம் தெரியாத சந்தோசம்; இருந்தாலும் அதன் உண்மையான அற்புதங்களை உணர்ந்தவனில்லை என்ற குற்ற உணர்வு எனக்குள் வருவதை தவிர்க்க முடியவில்லை.


இன்று வாழ்க்கையின் ஓட்டத்தில் வெகுதூரம் வந்துவிட்டாலும் அந்த மலையின் அடிவாரமாகிய தாணிப்பாறைக்கு சென்ற மாட்டுவண்டிப் பயணங்களும், அங்கிருக்கும் வழுக்குப்பாறையில் சருக்கிவிளையாடி கிழித்துக்கொண்ட டவுசர்களும்... ம்...ம்...

சதுரகிரியின் அற்புதங்களையும், போகத்தேவையான வழிகாட்டுதல்களையும் நண்பர் பிரபாகரன் அவர்கள் பதிப்பித்துக்கொண்டிருக்கிரார். இங்கு சென்று பாருங்கள்.

நீண்ட நாட்களுக்கு முன்பு kricons தனது வலைப்பூவில், சக்தி விகடனில் வந்த தொடரை தொகுத்து மென் புத்தகமாக கொடுத்திருந்தார். நல்ல புத்தகங்களை ஒரே இடத்தில் சேமிக்கும் முயற்சியாக இதோ நமது வலைப்பூவிலும்.

தொகுத்த kricons அவர்களுக்கு மிக்க நன்றி.

Click to download.



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts