தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Mar 27, 2009

பரமார்த்த குரு கதைகள்









ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வெறும் நகைச் சுவைக்காக அல்லாமல், அக்காலத்தில் தமிழ்க் கலாசாரத்தின் வெளிப்பாடுகளான சமய நம்பிக்கைகள், சமூக நடைமுறைகள், ஆகியன குறித்த தமது பார்வையின் பதிவாக வீர மாமுனிவர் என்ற பாதிரியார் ஜோசப் பெஸ்கி உரைநடையில் எழுதியது பரமார்த்த குருவும் சீடர்களும்.

தாம் பணிசெய்ய நேரிடும் வட்டாரத்தில் வழங்கும் மொழியினை நன்கு கற்றுத் தேர்ந்தால்தான் தமது பணியினைச் சரிவர நிறைவேற்ற இயலும் என்பதால் தமிழை நன்கு பயின்ற பாதிரியார் பெஸ்கி, தம்மைப் போலவே வெளியிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்து பணியாற்ற முற்படும் சக பாதிரிமார்கள் சுவாரசியமாகத் தமிழ் கற்க உதவும் தொண்டாகப் பரமார்த்த குரு கதையினை எழுதியிருக்கக் கூடும். அதுவே தமிழ் உரைநடை இலக்கியத்திற்கு ஒரு வரவாக அமைந்தது.

இனி கதை...
பரமார்த்த குரு ஒரு குருகுல ஆசிரியர்... மட்டி, மடையன், முட்டாள், மூடன், மண்டு என ஐந்து மாணவர்கள் அவரிடம் சீடர்களாக இருந்தனர். பேருக்கேற்றவாரே அவர்கள் குணமும் இருந்தது...

முன்பு பாட்டி மடியில் அமர்த்தி சொல்லித் தந்த சுவாரஸ்யமான கதைகளையெல்லாம் மறுபடியும் நினைக்கவைக்கிறது.

Click to download.
அக்கா அ. முத்துலிங்கம்













திரு. முத்துலிங்கம் 'தினகரன்' தமிழ் விழாச் சிறுகதைப் போட்டி, 'கல்கி' யின் ஈழத்துச் சிறுகதைப்போட்டி, ஆகியவற்றிலே பரிசும் பாராட்டும் பெற்றவர்.

"அக்கா" என்னும் தலைப்பை பார்த்துவிட்டு அவசர முடிவுக்கு வந்துவிட வேண்டாம். காதல் சகோதரபாசம் குடும்பச் சச்சரவு முதலிய வழக்கமான விடயங்கள் இங்கு இல்லை.

இச் சிறுகதைகள் முலம் யாழ்ப்பாணத்துக் கிராமப்புறச் சூழ்நிலையிலே சில பாத்திரங்களின் மனித உணர்ச்சிகளும் மனித உறவுகளும் எவ்வாறு தோன்றி இயங்குகின்றன என்பதை உணர்த்துகிறார்.




Click to download.

நேச நதிக்கரையில் காஞ்சனா ஜெயதிலகர்













படிக்கும் போது அம்மா, லக்ஷ்மி, ரமணிசந்திரன், அனுராதா ரமணன், காஞ்சனா ஜெயதிலகர் இதெல்லாம் படிப்பாங்க.. அம்மா படிக்கறதுக்கு முன்னாடியே நான் படிசுடுவேன்... பாடப்புத்தகம் படிக்கறனோ இல்லயோ ..அதெல்லாம் வேற விஷயம்.

Click to download.

Mar 21, 2009

நின்னையே ரதி என்று













ரமணிச்சந்திரன் புத்தகங்களைத் தான் புலம் பெயர்ந்த தமிழர்கள் அதிகம் படிக்கிறார்கள். ஐரோப்பாவிற்கு புத்தகம் ஏற்றுமதி செய்கிறவர்களைக் கேட்டால் நீங்கள் ரமணிச்சந்திரன் நாவலைப் போடுங்கள் அதிகம் விற்பனையாகும் என்றுதான் சொல்கிறார்கள்.
Click to download.

Mar 15, 2009

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்











சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் உன்னதத் தலைவர்களாக கருதப்படும் மார்க்ஸ் எங்கெல்ஸ், லெனின் ஸ்டாலின் போன்றவர்களுக்கு அடுத்தபடியாக விளங்கிய தலைவர் மாவோ.

சீனாவில் ஒரு கட்டுப்பாடான விடுதலைப்படையை உருவாக்கி, பல்வேறு கருத்துக்களையும் கொள்கைகளையும் கொண்டிருந்த மக்களையும் ஒரு பரந்த ஐக்கிய முன்னணி முலம் அணிதிரட்டி ஏகாதிபத்தியத்தையும், பிரபுத்துவத்தையும், தரகு முதலாளித்துவத்தையும் இறுதியில் தோற்கடித்தமை ஓர் அளப்பரிய சாதனையாகும்.

முக்கியத்துவம் மிக்க சீனாவின் மீது செந்தாரகை நூலிந் நான்காவது அத்யாயமாக அமைந்துள்ள ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் என்ற பகுதியே தமிழாக்கம் செய்யப்பட்டு இந்நூல் உருவாகியது. எதிர்நிலைப் பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ள இன்றைய சூழலில் இதுபோன்ற நூல்களின் தேவை மிக அவசியமானதாகும்.


Click to download.

Mar 4, 2009

என் உயிர் நீதானே ரமணி சந்திரன்












சமீபத்தில் ஒரு நண்பர் பின்னூட்டம் இட்டிருந்தார் அவரின் பின்னூட்டம் அப்படியே..........

There was no good opinion about Ramanichandran's book in my house... I also secretly (my chitti knows it) read "Kaathirukkiren Rajakumara" & "Konjam Nilavu Konjam Neruppu" as a teacher of mine hates her book also her books were said as adults stories... . I didn't like both books so just thought I am not gonna read it again. It was when I was 12 yrs old..

After O/Ls I read Kalkiyin "Sivagamiyin Sabatham" and didnt eat or sleep for one whole week. I was just crying and my parents started thinking abt all weird stuff... I cried continuously for a week...

After a couple of week I got to read Ms.Ramanichandrans interview. When someone asked why see writes stories with happy endings she told that she was so upset for 10days after reading sivagamiyin sabatham... And thought she would never write sad ending stories...

I love Anuradha ramanan's writing as I get stomach ache for laughing so much. Later, one day I was so shattered and didn't know what to do for a while... I found this book... I felt so good when I finished reading it... After that (I am not crazy abt her book but) I always look for her book only when I am disturbed... But, one of her book made me cry... malai mayangukindra neram... I cried lot.

I read fast as I don't even need one hr to read one novel... so i finished reading all 14 books in a day... Thanks for uploading... I would be glad if Ms.Ramanichandran gets to know abt a little fan...

click to download.

Mar 1, 2009

தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்






ராஜம் கிருஷ்ணன்.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். பந்தா சற்றும் இல்லாதவர். பெண்கள், அடித்தட்டு மக்கள், தலித், என்று எல்லாவித முற்போக்கு இயக்கங்களுடனும், தன்னைத் தயங்காமல் இணைத்துக் கொள்வார்.

அவரது புதினங்கள் பாவப்பட்ட, சுரண்டப்படும், ஏமாற்றப்படும், மக்களின் நிலையினை, கவர்ச்சி முலாம் எதுவும் பூசாமல், மிகைப்படுத்தாமல் படம் பிடித்துக்காட்டும். மனசாட்சியுடையோர் நெகிழ்ந்துவிடுவர்.

உற்றதுணையாக இருந்த கணவர் இறந்த பிறகு, குழந்தை எதுவும் இல்லாத நிலையில்,சுற்றத்திடம் இருந்ததையெல்லாம் இழந்துவிட்டு, நிர்க்கதியாக இருக்கிறாராம் ராஜம் கிருஷ்ணன்.

நண்பர்கள் ஒன்று சேர்ந்து அவரை சந்திக்கப் போகலாம். யாராவது ‘பெரிய’ மனிதர் ஆதரவைப்பெறலாம். ராஜம் கிருஷ்ணன் எப்படி வாழ விரும்புகிறாரோ, அப்படியே அவர் வாழ்வதற்கு உதவ, நாம் முயற்சிக்கலாம்.

நாஞ்சில் நாடன்.

நாஞ்சில் நாடன் தமிழ்ச் சிறுகதையுலகில் மிகச் சிறப்பான எழுத்தாளர். இவரது எழுத்துலகம் குமரி மாவட்டத்து நாஞ்சில் பிரதேச மக்களும், அதன் மண்ணும் கலந்து உருவானது. தமிழ் எழுத்தாளர்களிடம் அபூர்வமாகவே காணப்படும் நகைச்சுவையும், பகடியும் இவருக்குச் சரளமாகக் கை வரக்கூடியது.

அய்க்கண்.

"ஆனந்த விகடன்' நடத்திய மாணவர் திட்டத்தின் கீழ் என்னுடைய "வள்ளியின் திருமணம்' என்கிற சிறுகதை முதன் முதலாக விகடனில் என் புகைப்படத்துடன் பிறந்தது. அந்தக் கதைக்கான சன்மானத்துடன் ஒரு அழகான பேனாவும் பரிசாக அனுப்பியிருந்தார் ஆசிரியர். அது ஒரு முக்கோணக் காதல் கதைதான் என்றாலும், "கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது' என்ற திருக்குறளை மையக் கருத்தாக வைத்து எழுதியிருந்தேன். அன்றிலிருந்து இன்றுவரை ஏதாவது ஒரு "கருத்து' அல்லது "செய்தி' இல்லாத கதையே நான் எழுதியதில்லை என்ற மனநிறைவு எனக்கு உண்டு.

click to download.


முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Blog Archive

Popular Posts