தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Dec 31, 2010

சம்போ சிவ சம்போ!-சத்குரு ஜக்கி வாசுதேவ்--மின்னூல்


அன்பு நண்பர்களே!,

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் சம்போ சிவ சம்போ மென்நூலை இங்கு சொடுக்கி பதிவிரக்கம் செய்து படித்து மகிழுங்கள்.

புத்தாண்டு வாழ்த்துகள்.

அன்புடன்,

ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

Dec 22, 2010

ஆயிஷா குறுநாவல் தரவிரக்கம்

அனைவருக்கும் வணக்கம்,

என்னுடைய சகோதரன் வலைப்பூவில் ஆயிஷா புத்தகத்தினைப் பற்றி சில மாதங்களுக்கு முன் எழுதியிருந்தேன். அத்துடன் ஆயிஷா நாவலுக்கான சுட்டியினையும் இணைத்திருந்தேன். அனைவரும் படித்துவிட்டு பாராட்டினர்.

இன்றைய கல்வி முறையில் உள்ள சீர்கேடுகளை பற்றி விவரிக்கும் நாவல் என்பதால் உங்களுக்கும் இதனை அறிமுகம் செய்கிறேன்.



ஆயிஷா புத்தகத்தினை தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு என எட்டு மொழிகளில் மொழி பெயர்த்திருக்கின்றார்கள். உண்மையில் ஒரு பெண்குழந்தையை காவு வாங்கிய கல்வி முறையை இதை விட சிறந்ததாக யாராலும் பதிவு செய்திருக்க முடியாது. ஆசிரியர் இரா. நடராசன் இந்தப் புத்தகத்தினை தன்னுடைய இணையப் பக்கத்தில் இலவசமாகவே இணைத்திருக்கிறார்.

தமிழில் ஆயிஷா நாவலை படிக்க,..

ஆங்கிலத்தில் ஆயிஷா நாவலை படிக்க,..

நன்றி.

அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

Dec 5, 2010

சகோதரன் ஜெகதீஸ்வரனின் வணக்கங்கள்

இந்த மாபெரும் வலைப்பூவின் வளர்ச்சியில் நானும் பங்காற்ற வாய்ப்பு கொடுத்த நண்பர் ஸ்ரீ அவர்களுக்கு என்னுடைய பல்லாயிரம் நன்றிகள்.


இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த வலைப்பதிவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் நான். என்னுடைய வலைப்பூ சகோதரன். தங்களுடைய எண்ணங்களை, கோபங்களை முன் வைக்கும் வலைப்பதிவுகளில் அரிதாக சில மட்டும் வாசகர்களுக்காக எழுதப்படுபவை. அந்த சில வலைப்பூக்களில் ஸ்ரீயின் இந்த வலைப்பூவும் ஒன்று என்பதில் பெரும் மகிழ்ச்சி.

இணையத்தில் வாசிப்பு அனுபவத்திற்காக தேடித்திரியும் வாசகர்களுக்கு இந்த வலைப்பூ ஒரு பொக்கிசம். சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து வழங்கும் ஒரு வலைப்பூ அழியாச்சுடர்கள் என்ற பெயரில் இயங்கி வருகிறது. பதிப்புரிமை என்பதையெல்லாம் தாண்டி வாசகர்களுக்கு நல்ல படைப்புகள் சென்றடைய வேண்டும் என்பதே அதன் நோக்கம். இங்கு அழியாச்சுடர்களை அறிமுகம் செய்ய காரணம். அதன் நோக்கமும் ஸ்ரீயின் நோக்கமும் ஒன்றாக இருப்பதை சுட்டிக் காட்டவே.

மிக விரைவில் இத்தளத்தின் வளர்ச்சிக்கு என்னால் இயன்றதைச் செய்கிறேன்.

இங்கு வருபவர்களுக்கு இது ஒரு இணைய நூலகம் என்பது தெரியும். எனவே உங்கள் நண்பர்களுக்கும் இத்தளத்தினை அறிமுகம் செய்யுங்கள். தமிழ் எழுத்துலக ஜாம்பவான்களின் நூல்களும், மிக அரிய படைப்புகளும் இங்கே மேலும் இணையப் போகின்றன.

வலைப்பதிவை தொடரும் 265 நண்பர்களுக்கும், நண்பர் ஸ்ரீக்கும் மிக்க நன்றி.

அன்புடன்,

ஜெகதீஸ்வரன்.

sagotharan.wordpress.com


முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts