தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Jan 21, 2010

ஆத்மா, மோட்சம்_நரகம்- பெரியார்












நமக்குக் கடவுளைப் பற்றியாவது, மதத்தை பற்றியாவது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்கி அவர்களுக்கு அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவைகளில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து விடுதலையை உண்டாக்கவேண்டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும் அநேக தடவைகளில் வெளியிட்டிருக்கிறோம்.

அதுவும் பலர் நம்முடைய இம்முயற்சியில் கடவுளையும், மதத்தையும் கொண்டுவந்து குறுக்கே போட்டுவிட்டதால்தான் நாம் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டியதாயிற்றேயொழிய உண்மையில் கடவுளையும், மதத்தையும் பற்றிப் பேசவேண்டும் என்கின்ற அவசியத்தையோ, ஆசையையோ கொண்டு நாம் அதில் பிரவேசிக்கவில்லை.

.......மனிதன் உலகத் தோற்றத்திற்கும், நடப்பிற்கும், சம்பவங்களுக்கும் காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில், கடவுள் சக்தி என்றும் கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்வதும், உதாரணமாக அவற்றிற்குக் காரணகாரியம் தோன்றிய பின்பு, அந்நினைப்பு கொஞ்சம கொஞ்சமாக மாறிவிடுவதும் சகஜம் என்பத்தாகக் குறிப்பிட்டு இருக்கிறோம்.......

.........மதம் மக்களைக் கொழைகளாக்குகின்றது. மதத்தினால் இவ்வளவு அநீதிகள் ஏற்பட்டும், உலக சம்பவங்களின் உண்மைக் காரணகாரியங்கள் உணர்வதர்கில்லாமல், நிர்பந்தமாய் மக்கள் மதத்தினால் தடுக்கப்படுகின்றார்கள். .....

.....உண்மைச் சைவன் என்பவன் ஒருவன் எவ்வளவு அயோக்கியனானாலும், ஒரு துளி சாம்பல் அவன் மேல்பட்டு விட்டால் உடனே அவனுடைய சகல பாவமும் தீர்ந்து நேரே "கைலையங்கிரிக்கு"ப் போய்விடலாம் என்கிறான் என்றால் சிவனின் யோக்கியத்திற்கும், சைவ சமையத்தின் பெருமைக்கும் வேறு சாட்சியம் தேவையா?.....

படித்தால் கிடைக்கும்; மதங்களின் மற்றொரு பரிணாமம்..


Click to download.

ஏன் எதற்கு எப்படி சுஜாதா















படிக்கும் காலங்களில் என்னைப் பாதித்த எழுத்தாளர் சுஜாதா. அவரது என் இனிய இயந்திராவைப் படித்துவிட்டு மீண்டும் ஜீனோவிர்ககாக அலையோ அலை என்று அலைந்திருக்கிறேன். அவருடைய ஜிட்டு (சரியா?) சிறுகதையை வாசித்துவிட்டு அந்த குழந்தைக்கு என்ன ஆனதோ என்ற அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இரண்டு மூன்றுநாட்கள் ஆகியது. இன்று நினைத்தாலும் மனதை என்னவோ செய்யும் சிறுகதை அது.

பிரிவோம் சந்திப்போம் பாகம் 1 ஐ ஒரே நாளில் படித்துவிட்டு பாகம் 2 க்காக அலைந்து திரிந்து ஒரு முடிவுசெய்தேன் இனிமேல் பரிட்சை காலங்களில் சுஜாதாவின் புத்தகங்கள் படிக்கக்கூடாது என்று( அது புதுவருட சத்தியம் போல ஆனது வேறு கதை). பிறகு ஒரு நேரத்தில் பிரிவோம் சந்திப்போமின் இரண்டாம் பாகம் படித்து வெளிநாட்டில் வேலைக்கே போகக்கூடாது என்று முடிவுசெய்தேன் (இப்போது வெளிநாட்டில் தான் வேலை செய்கிறேன்!!).


ஏன் எதற்கு எப்படி புத்தகம் ஒரு சொத்தாக என்னிடம் இருக்கிறது. வேறு எதையோ இணையத்தில் தேடியபோது மென்புத்தகமாக கிடைத்தது பதிவிட்டுவிட்டேன். என்னதான் இருந்தாலும் அந்த புத்தகத்தில் படிக்கும் திருப்தி மென்புத்தகமாக படிப்பதில் எனக்குக் கிடைக்கவில்லை.

Click to download.

Jan 7, 2010

தமிழ் சினிமா: அமுதும் நஞ்சும் சுதேசமித்திரன்







பொங்கலோ பொங்கல் ...

இனிய


பொங்கல் நல் வாழ்த்துக்கள்.


திரைக்கதை இல்லாத சினிமா என்பது ஆணுறை அல்லது பெண்ணுறை இல்லாமல் பாலியல் தொழிலாளியிடம் போவதைப் போல துணிகரமானது.

உலகத்திலேயே அபத்தமானதொரு சினிமாவுக்குக்கூட திரைக்கதை என்பதாக ஒன்று இருந்துதான் தீரவேண்டும்.



ஆனால் இதையெல்லாம் கடந்து எடிட்டர் பார்த்து எதைச் செய்து தருகிறாரோ அதுவே சினிமா என்று கையைக்கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்த வகையில் தமிழ் சினிமா உலக சாதனையோன்றையே படைத்துவிட்டது என்பதுதான் முதல் விசேஷம்.



......இந்தக் காலகட்டத்தில் பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே என்னும் திரைப்படம் 1970 ல் வெளிவந்த Robert Bolt எழுதி David Lean இயக்கிய Ryan's Daughter எனும் ஆங்கிலப் படத்தின் பாத்திரங்களைக் காப்பியடித்து வெளியாகிறது. அது காப்பி என்று ரயான்ஷ் டாட்டரை அறிந்திராதவர்கள் தெரிந்துகொள்ள இயலாத வகையில் திரையுலகினுக்குள் பெரும் புரட்சி என்று செய்து காட்டியது.....



....பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே ஏற்படுத்திய அலையில் ஆளாளுக்கு கிராமத்துக்குள் கேமராவைத் தூக்கிக்கொண்டுபோய் சினிமா எடுக்கிறேன் என்று ஆரம்பிக்க நேர்ந்த அவலம்தான் திரைக்கதை இல்லாத சினிமாவின் தொடக்க காலம்....

.......இன்றைக்கு உலகநாயகன் கமலஹாசன் சினிமாவை முன்னே கொண்டு செல்வேன் என்று குருதிப்புனல், தேவர்மகன், ஹே ராம், மகாநதி, அன்பே சிவம் என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதற்கெல்லாம் யார் காரணம் என்று கேட்டால் அவரேதான் காரணம் என்றுதான் பதில் சொல்ல முடிகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகராக இருந்தும் அவரால் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்துவது இனியும் சாத்தியமேயில்லை என்கிற நிலை ஏற்பட்டிருப்பதற்கு யார் காரணம் என்று கேட்டால் அவரேதான் காரணம் என்றுதான் பதில் சொல்ல முடிகிறது....

......சினிமாவும் அரசியலும் தொடர்ந்து ஊடும் பாவுமாகப் பின்னப்பட்டுக்கொண்டே வருகின்றன. திருநாவுக்கரசு, திருமாவளவன் போன்ற பிறவி அரசியல்வாதிகள் கூட சினிமாவில் தலைகாட்டினால்தான் ஆச்சு என்று ஏமாந்துபோகிற அளவுக்குப் போய்விட்டது......

.....எனது தமிழ் விரிவுரையாளர் ஒருமுறை இந்தக் கேள்வியை வகுப்பில் கேட்டார். சினிமாவில் எதனால் பாடல்கள் இடம் பெறுகின்றன? என்று. யாருக்கும் விடை தெரியவில்லை. அவரே சொன்னார். காதலர்கள் பழகுகிற காலம் நீண்டதாக இருக்கலாம். அதைச் சுருக்கித் தர ஒரு பாடல் போதும். இது ஒரு சூத்திரம்.....

இணைய வாசகர்களுக்காக சுதேசமித்திரன் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரை இது. வித்தியாசமாக இருந்தது என்று பதிவிட்டுவிட்டேன். ( தொகுத்த யாரோ ஒரு அன்பருக்கு நன்றி).


Click to download.


முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts