சந்திரன் 27 நாள் 7 மணித்தியாலத்தில் ஒருமுறை பூமியைச் சுற்றுகிறது. இதன் பாதையும் நீள்வளைய வடிவமாக இருப்பதால் பூமியிலிருந்து இதன் தூரம் எப்போதும் ஒரே அளவாக இருப்பதில்லை. பூமியில் இரண்டு இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் சந்திரன் இருக்கும் கோணங்களையும் அந்த இரண்டு இடங்களின் இடைத் தூரத்தையும் அறிந்தால் இவற்றிலிருந்து சந்திரனின் தூரத்தை மிகவும் இலகுவாக கணிக்கலாம்.....
பூமியிலிருந்து ஒரு கல்லை 11.2 கி.மீ. (7 மைல்) வேகத்துடன் ஒரு கல்லை எறிய முடியுமானால் அக்கல்லானது அப்படியே மேல்நோக்கிச் சென்றுகொண்டேயிருக்கும், பூமிக்குத் திரும்பி வராது. இந்த வேகத்தைத் தப்பும் வேகம் velocity of escape என்பர். சந்திரனில் தப்பும் வேகம் 2.4 கி.மி. ஆகும்....
கிரகங்களில் மிகவும் அடர்த்தி குறைந்தது சனியாகும். இதன் சார்படர்த்தி 0.7. நீரிலும் பாரம் குறைந்தது. ஒரு பிரமாண்டமான சமுத்திரத்தில் இதனை வைத்தால் இது மிதக்கும்....
1910 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி ஹாலியின் வால்வேள்ளியின் வலுக்கூடாகப் பூமி சென்றது. அப்போது அதன் வால் ஏறக்குறைய 3.2 கோடி கி. மி. நீளம் இருந்தது. வால்வெள்ளியின் தலை பூமியுடன் மோதினால் ஆபத்து ஏற்படலாம், ஆனால் அதன் வால் எவ்வித கெடுதியையும் விளைவிக்காது...
ஏராளமான சுவாரசியமான தகவல்கள் இப்புத்தகத்தில் நிறைந்துள்ளது.
Click to download.
நிறையப்பேர் இத்தளத்தைப் பற்றி அறிந்து கொள்ள தமிழிஷில் ஓட்டுபோட மறந்துவிடாதீர்கள்.
அய்யா, வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம், நானும் வெகு நாட்களாக google ads -க்காக அலைந்து திரிந்து விட்டேன்.
ReplyDeleteஆனால் கிடைக்கவில்லை. என்னிடம் தனியாக domain இல்லை. blogspot தான் இருக்கிறது.
blospot-க்கு google ad தருவார்களா? தரமாட்டார்களா?
உங்கள் வலைபூவில் google ad -போட்டுள்ளீர் மகிழ்ச்சி. எனக்கும் கொஞ்சம் சொல்லி தர முடியுமா?
தயவு செய்து mail அனுப்பவும்.
invincible2420@gmail.com
வருகைக்கு மிக்க நன்றி ஐயா,
ReplyDeleteஇது பற்றி நமது தமிழ்நெஞ்சம் அவர்கள் விரிவாக, தெளிவாக இரண்டு பதிவுகள் போட்டுள்ளார்.
அதை இங்கு சென்று பாருங்கள்
http://www.tamilnenjam.org/2009/06/blog-post_03.html
உங்களிடம் தமிழ் blog இருந்தால் அட்சென்ஸ் பெரும்பாலும் பொதுச்சேவை விளம்பரங்களே வருகிறது, பயன் ஒன்றும் கிடையாது.
முயற்சி செய்யுங்கள், வாழ்த்துக்கள்.
மொக்கை நிறைந்த பதிவுலகில் அற்புதமான பணியை செய்து வருகிறீர்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே...
பூக்களுக்கு வந்து
ReplyDeleteவாழ்த்துக்கள் பாடும்
வண்ணத்துபூச்சிக்கு தெரியுமா
உங்களுக்காய் நாங்கள்
செய்யும் தவம்.