
நாம் உண்ணும் உணவே உயிர் உடலிருக்க செய்யும் மருந்தாகும். அவரவர் தேகத்திற்குப் பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உண்பதினாலும் பிணிகள் உற்பத்தி ஆகின்றன.
மருத்துவ மூலிகைகள் என்பன நோயை நீக்கிக் கொள்ள மிகப் பழங்காலத்திலிருந்தே உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும்.
பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத முறைகள், சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன.
சித்த, ஆயுர்வேத முறைகளில் தாவரங்களில் உள்ள குணாதிசயங்கள் மட்டுமல்லாமல், சில குறிப்பிட்ட கால நேரங்களில் கிரக நிலைக்கேற்ப இந்த தாவரங்களில் பொதிந்து விலகும் 'எல்லைக்கு அப்பாற்பட்ட சக்தி'களும் மிக முக்கிய பண்பாகக் கருதப்படுகிறது. ஆகவே இந்தத் தாவரங்களை மருத்துவத்திற்க்காக சேகரிக்கும் காலங்களும், சேகரிப்பவரின் உடல் சுத்தம், உள்ளச் சுத்தம், சேகரிக்கும் போதும் மருந்து தயாரிக்கும் போது உச்சரிக்க வேண்டியவை முதலியவற்றை தேர்ந்த வல்லுநரிடமே அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த புத்தகம் சிறுமணிவூர் முனிசாமி முதலியார் என்பவரால் 1899 ம் ஆண்டு மிகுந்த பிரயாசை எடுத்து எழுதப்பட்டுள்ளது. பதிக்கப்பட்ட நேரத்தில் வேறு யாவரேனும் அச்சிட்டால் நஷ்டம் வசூல் செய்யப்படும் என்று புத்தகத்தில் ஆசிரியர் எச்சரிக்கை செய்துள்ளார்.
நூற்றாண்டுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில் இத்தகைய பொக்கிஷங்களை பாதுகாத்து வைப்பது நமக்கு மட்டுமல்லாது நமது சந்ததியினர்களுக்கும், சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

மிக நல்ல நூல் நண்பரே நன்றி
ReplyDelete