தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Apr 4, 2010

விக்கிரமாதித்தன் கதைகள்




















வேதாளக் கதைகள் இருபத்துநான்கும் இரண்டாவது பதுமையாகிய மதனாபிஷேகப் பதுமை சொன்னவை ஆகும். இதில் பதுமைகள் சொல்லும் கதைகள் விக்கிரமாதித்யனின் அறிவு ஆற்றல் பராக்கிரமங்களைப் பறைசாற்றும் விதமாக உள்ளன. ஒவ்வொரு பதுமையும் ஒற்றைக்கதையாகச் சொல்லவில்லை. ஒரு கதை ஆரம்பித்து கதைக்குள் கதைக்குள் கதைக்குள் கதை என்கிற பாணியில் சொல்வதால் மொத்தப் புத்தகத்தில் பல நூறு கதைகள் உள்ளன. விக்கிரமாதித்தன் கதைகள் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளன.



தொடர்புடைய ஆலயம்


திருச்சியில் மகாகாளிகுடி ஊரில் இருக்கும் உஜ்ஜைனி மகாகாளி அம்மன் ஆலயம் விக்கிரமாதித்தன் கதைகளுடன் தொடர்புடைய ஆலயமாக விளங்குகிறது.


பின்னணி


காளி தேவியின் பக்தனான விக்கிரமாதித்தன் வடநாட்டில் உள்ள உஜ்ஜைனியை ஆண்டு வந்தான். ஆறுமாதம் நாடு, ஆறு மாதம் காடு என்று அவன் ஆண்டுவந்த அவன், காடாறு மாத சமயத்தில் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வான். ஒரு முறை தெற்கே வந்தான்.கையோடு தான் கொண்டு வந்த காளி தேவியைக் காவிரிக்கரையில் வைத்துப் பூஜித்து வந்தான். அந்தக் காளி தான் திருச்சியில் மகாகாளிகுடி ஊரில் குடியிருக்கும் உஜ்ஜைனி மகாகாளி அம்மன்.


தன்னை தினமும் பூஜித்த விக்கிரமாதித்தனிடம் காளி ஒருமுறை, "இங்கிருந்து இரண்டுகல் தொலைவில் ஒரு சிவாலயம் உள்ளது. அந்த சிவன் கோவிலில் உள்ள முருங்கை மரத்தில் ஒரு வேதாளம் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை நீ கீழே இறக்கினால் அது உனக்கு முப்பத்திரண்டு கதைகளையும் உன் வாழ்வுக்கு வர இருக்கும் யோக ரகசியங்களையும் சொல்லும். அதன்படி நடந்து நீ உன்னத பதவியைப் பெறு" என்று கூறி மறைந்தாள்.
காளிதேவியின் கட்டளைப்படி அங்கு சென்ற விக்கிரமாதித்தன் வேதாளம் கூறிய முப்பத்திரண்டு கதைகளுக்கும் விடை கூறி அதற்கு சாப விமோசனம் அளித்தான்.


சிவாலயத்தின் பின்னணி


பழங்காலத்தில் அந்தக் கோவிலின் அர்ச்சகர், சிவனுக்கும் பார்வதிக்கும் பொங்கல் நைவேத்தியம் செய்து விட்டு மறதியாக அதைக் கோயிலின் உள்ளேயே வைத்துப் பூட்டி விட்டு வீட்டுக்குப் போய் விட்டார். வீட்டில் அர்ச்சகரின் மனைவி, 'பொங்கல் எங்கே?' என்று கேட்டபிறகு தான் ஞாபகம் வந்தவராக மீண்டும் கோவிலுக்குப் போயிருக்கிறார். பூட்டியிருந்த கர்ப்பக்கிரகத்தின் உள்ளே இருந்து பேச்சுக் குரல் வர, சாவித்துவாரம் வழியே உள்ளே பார்த்திருக்கிறார்.


உள்ளே சிவபெருமான் பார்வதி தேவிக்கு முப்பத்திரண்டு கதைகள் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார். அர்ச்சகர் ஒட்டுக் கேட்பது தெரிந்ததும் சிவபெருமான் கோபம் கொண்டு அர்ச்சகரை வேதாளமாக்கி முருங்கை மரத்தில் தொங்கும் படி சபித்து விட்டார்.


விமோசனம் கேட்டுக் கதறிய அர்ச்சகரிடம் "நீ வேதாளமாகத் தொங்கும் போது ஒருவன் உன்னைக் கீழே இறக்குவான். அவனிடம் நீ கேட்ட எல்லாக் கதைகளையும் சொல்லி விடை கேள். அனைத்துக் கதைகளுக்கும் விடை சொல்பவன் தான் விக்கிரமாதித்தன். அவனிடம் அடிமையாக இருந்தபிறகு என்னை வந்தடைவாயாக" என்று சொல்லி மறைந்தார் சிவபெருமான்.



மேலும் தெரிந்துகொள்ள --தமிழ் விக்கிபீடியா

Part 1



Click to download.



Part 2



Click to download.

7 comments:

  1. மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயம்...இந்தக் கால சிறுவர்களுக்கு புத்தகமாக கொடுப்பதை விட PDF FILES ஆகக் குடுத்தால் தானே படிக்கிறார்கள்..?
    நன்றி..!

    ReplyDelete
  2. Anonymous17/8/11

    I have been looking for this book, it is great. It reminded me my childhood. I think it is not suitable for children. Because I was bit confused about the human sexual relationship mentioned in this book when I first read this book when I was 11 years old.

    Thank you Very Much
    T.KRISHNA (LONDON)

    ReplyDelete
  3. Thanks for sharing.

    ReplyDelete
  4. Anonymous18/9/12

    Thank u friend...

    ReplyDelete
  5. Anonymous5/9/13

    I cann't download on my mobile . I'm using. Opera mini :) . . Pls fix this :(

    ReplyDelete
  6. தோழா, இன்னும் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகளை அப்லோட் செய்யலாம். க.நா.சு. அவர்களின் படைப்பகள், சுந்தர ராமசாமி, கவிஞர் விக்ரமாதித்யன், பிரமிள்,புதுமைப் பித்தன்,ஜெயகாந்தன்,ஜெயமோகன்,ஜே.கிருஷ்ணமூர்த்தி,கி.ரா.,சி.சு.செல்லப்பா,பாரதியார்,பாரதிதாசன்,கண்ணதாசன்,வண்ணநிலவன்,வண்ணதாசன்,தி.ஜானகிராமன்.....
    இவர்களின் படைப்புக்களையும் ஏற்றலாம்.
    அயல்நாட்டு இலக்கியப்படைப்புக்களையும் தயை கூர்ந்து ஏற்றவும்.
    டால்ஸ்டாய்,காரக்கி,காஃப்கா,ஹெமிங்வே,செகாவ்,தஸ்த்தாயெவ்ஸ்கி,டிக்கன்ஸ்,பாப்லோ நெர்தா,ஷேக்ஸ்பியர்,.......

    ReplyDelete
  7. Anonymous8/11/17

    Getting "The requested URL http://downloads.ziddu.com/download/9292598/Vikramadityankadaigalpar1.pdf.html and http://downloads.ziddu.com/download/9293337/Vikramadityankadaigal_part2.pdf.html was not found on this server.". please check and update the URL.

    ReplyDelete



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts