
இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த வலைப்பதிவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் நான். என்னுடைய வலைப்பூ சகோதரன். தங்களுடைய எண்ணங்களை, கோபங்களை முன் வைக்கும் வலைப்பதிவுகளில் அரிதாக சில மட்டும் வாசகர்களுக்காக எழுதப்படுபவை. அந்த சில வலைப்பூக்களில் ஸ்ரீயின் இந்த வலைப்பூவும் ஒன்று என்பதில் பெரும் மகிழ்ச்சி.
இணையத்தில் வாசிப்பு அனுபவத்திற்காக தேடித்திரியும் வாசகர்களுக்கு இந்த வலைப்பூ ஒரு பொக்கிசம். சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து வழங்கும் ஒரு வலைப்பூ அழியாச்சுடர்கள் என்ற பெயரில் இயங்கி வருகிறது. பதிப்புரிமை என்பதையெல்லாம் தாண்டி வாசகர்களுக்கு நல்ல படைப்புகள் சென்றடைய வேண்டும் என்பதே அதன் நோக்கம். இங்கு அழியாச்சுடர்களை அறிமுகம் செய்ய காரணம். அதன் நோக்கமும் ஸ்ரீயின் நோக்கமும் ஒன்றாக இருப்பதை சுட்டிக் காட்டவே.
மிக விரைவில் இத்தளத்தின் வளர்ச்சிக்கு என்னால் இயன்றதைச் செய்கிறேன்.
இங்கு வருபவர்களுக்கு இது ஒரு இணைய நூலகம் என்பது தெரியும். எனவே உங்கள் நண்பர்களுக்கும் இத்தளத்தினை அறிமுகம் செய்யுங்கள். தமிழ் எழுத்துலக ஜாம்பவான்களின் நூல்களும், மிக அரிய படைப்புகளும் இங்கே மேலும் இணையப் போகின்றன.
வலைப்பதிவை தொடரும் 265 நண்பர்களுக்கும், நண்பர் ஸ்ரீக்கும் மிக்க நன்றி.
அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.
sagotharan.wordpress.com
ஜெகதீஸ்வரன் அவர்களை அன்புடன் வரேவற்கிறோம்.ஆவலுடன் படைப்புகளை எதிர்பார்க்கிறோம்.நன்றி..!!
ReplyDeleteஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
ReplyDelete@சேலம் தேவா
ReplyDelete@அன்பரசன்
நன்றி நண்பர்களே!