என்னுடைய சகோதரன் வலைப்பூவில் ஆயிஷா புத்தகத்தினைப் பற்றி சில மாதங்களுக்கு முன் எழுதியிருந்தேன். அத்துடன் ஆயிஷா நாவலுக்கான சுட்டியினையும் இணைத்திருந்தேன். அனைவரும் படித்துவிட்டு பாராட்டினர்.
இன்றைய கல்வி முறையில் உள்ள சீர்கேடுகளை பற்றி விவரிக்கும் நாவல் என்பதால் உங்களுக்கும் இதனை அறிமுகம் செய்கிறேன்.

ஆயிஷா புத்தகத்தினை தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு என எட்டு மொழிகளில் மொழி பெயர்த்திருக்கின்றார்கள். உண்மையில் ஒரு பெண்குழந்தையை காவு வாங்கிய கல்வி முறையை இதை விட சிறந்ததாக யாராலும் பதிவு செய்திருக்க முடியாது. ஆசிரியர் இரா. நடராசன் இந்தப் புத்தகத்தினை தன்னுடைய இணையப் பக்கத்தில் இலவசமாகவே இணைத்திருக்கிறார்.
தமிழில் ஆயிஷா நாவலை படிக்க,..
ஆங்கிலத்தில் ஆயிஷா நாவலை படிக்க,..
நன்றி.
அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/
வாழ்த்துக்கள்!! கலக்குங்க சகோ..
ReplyDeleteநன்றி நண்பரே!.
ReplyDeleteஆயிஷா என் மனம் உருக்கி கண்ணீர் வடிவில் கொண்டு வந்தவள், கல்லூரிப் புத்தகம் ஒன்றில் படித்தேன், அதில் ஆயிஷா, ஜீவிதத்தின் உள்வட்டம், அகலிகை, போன்ற சிறந்த கதைகள் இருந்தன, அப்புத்தகம் என் நண்பருடையது, மீண்டும் மீண்டும் படித்து கண்ணீர் விடவும் ஏங்கினேன், உங்கள் பதிவின் மூலம் மனம் நிறைந்தது, நன்றி.
ReplyDeleteI cried reading this, what a wonderful angel ayesha is....
ReplyDeletei m very proud that the Mr.Natarajan is my school principal....
ReplyDelete