தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.
இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.
1. முயன்றவரை மரம் நடுங்கள்.
2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.
3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.
நன்றி
ஸ்ரீ
இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
அனைவருக்கும் வணக்கம்,
என்னுடைய சகோதரன் வலைப்பூவில் ஆயிஷா புத்தகத்தினைப் பற்றி சில மாதங்களுக்கு முன் எழுதியிருந்தேன். அத்துடன் ஆயிஷா நாவலுக்கான சுட்டியினையும் இணைத்திருந்தேன். அனைவரும் படித்துவிட்டு பாராட்டினர்.
இன்றைய கல்வி முறையில் உள்ள சீர்கேடுகளை பற்றி விவரிக்கும் நாவல் என்பதால் உங்களுக்கும் இதனை அறிமுகம் செய்கிறேன்.

ஆயிஷா புத்தகத்தினை தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு என எட்டு மொழிகளில் மொழி பெயர்த்திருக்கின்றார்கள். உண்மையில் ஒரு பெண்குழந்தையை காவு வாங்கிய கல்வி முறையை இதை விட சிறந்ததாக யாராலும் பதிவு செய்திருக்க முடியாது. ஆசிரியர் இரா. நடராசன் இந்தப் புத்தகத்தினை தன்னுடைய இணையப் பக்கத்தில் இலவசமாகவே இணைத்திருக்கிறார்.
தமிழில் ஆயிஷா நாவலை படிக்க,..ஆங்கிலத்தில் ஆயிஷா நாவலை படிக்க,..நன்றி.
அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/
நீங்க என்ன சொல்லப்போறீங்க..
Popular Posts
-
கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம், காலத்தினை வென்றெடுத்து நிற்பது. இளம் தலைமுறைகளையும் கவர்ந்திழுக்கும் இந்த நூலின் வலிமை,...
-
ஏற்றம் புரிய வந்தாய் ரமணி சந்திரன் வாசகர்களில் ரமணி சந்திரனுக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கிறது. குறிப்பாக அவருக்கு பெண் வாசகிகள் எராளம்...
-
கல்கியின் பொன்னியின் செல்வனை கேட்டு முடிச்சாச்சா, நான் இரண்டு பாகம் முடித்து மூன்றாவது பாகத்தினை கேட்டுக் கொண்டிருக்கிறேன். வலையுலகில் பெ...
-
வந்தார்கள் வென்றார்கள்-மதன மதன் என்கிற கோவிந்த குமார், தமிழக பத்திரிக்கையாளர், மற்றும் கேலி சித்திரயாளர் மற்றும் சினிமா விமர்சகர். இவர் 194...
-
நாவல் உலகில் வரலாற்று நாவல்களை எழுதியவர்களில் மிக முக்கியமானவர் சாண்டியல்யன். அவருடைய புத்தகங்கள் மென்நூலாக இணையத்தில் கிடைப்பது கொஞ்சம் அரி...
-
ஐயா தங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள் எனினும் தங்களின் சேவையில் எனது பங்களிப்பையும் ஏற்றுக்கொள்ளவும். நன்றி. Kuruparan Paramanant...
-
ரொமான்ஸ் ரகசியங்கள் இந்த உலகத்தில் நான் யாரோ ஒருவன் என நினைக்காதே.. யாரோ ஒருத்திக்கு நீயே உலகமாக இருக்க முடியும்!. திருமணங்கள் தோல்வியில் ம...
-
மதன் வியப்பூட்டும் மிகப்பெரும் எழுத்தாளர், கார்டூனிஸ்ட், திரை விமர்சகர் என்று பல்வேறு மாறுபட்ட திறன்களை உடையவர். தமிழனுக்கு எப்படி சரிய...
-
கடல் கடந்து கரையேறலாம்! ஏற்றுமதிக்கு ஒரு என்சைக்ளோபீடியா. சென்னையைச் சுற்றிப் பார்க்கவந்த ஒருவர் மயிலாப்பூரில் ஒரு டிபன் கடையில் இட்லி சாப்...
-
அன்புடைய நண்பர்களுக்கு, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு. எனது இந்த இலவச புத்தகங்கள் தரவிறக்கம் செய்யும் தளம் நீண்ட நாட்கள...
வாழ்த்துக்கள்!! கலக்குங்க சகோ..
ReplyDeleteநன்றி நண்பரே!.
ReplyDeleteஆயிஷா என் மனம் உருக்கி கண்ணீர் வடிவில் கொண்டு வந்தவள், கல்லூரிப் புத்தகம் ஒன்றில் படித்தேன், அதில் ஆயிஷா, ஜீவிதத்தின் உள்வட்டம், அகலிகை, போன்ற சிறந்த கதைகள் இருந்தன, அப்புத்தகம் என் நண்பருடையது, மீண்டும் மீண்டும் படித்து கண்ணீர் விடவும் ஏங்கினேன், உங்கள் பதிவின் மூலம் மனம் நிறைந்தது, நன்றி.
ReplyDeleteI cried reading this, what a wonderful angel ayesha is....
ReplyDeletei m very proud that the Mr.Natarajan is my school principal....
ReplyDelete@கலைச்செல்வன்.க
ReplyDelete@Anonymous
நன்றி நண்பர்களே.
@prasanth
நடராஜன் அவர்கள் ஆசானாக இருந்தமைக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். நன்றி.