தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Nov 7, 2009

அது ஒரு நிலாக்காலம் ராஜேஷ்குமார்




















ஒருவழியாக நீண்ட நாட்களுக்கு பிறகு இணையத்திற்கு வரமுடிந்தது. காத்திருந்த மற்றும் வந்து சென்ற அனைவருக்கும் மிக்க நன்றி. இனிமேல் அடிக்கடி வரமுடியும் என்று நினைக்கிறேன். அது ஒரு நிலாக்காலம் இணையத்தில் ஒருநாள் உலவும் போது கிடைத்தது, பதிவிட்டு விட்டேன்.

ziddu வில் ஃபைல் டவுன்லோட் செய்வதற்கு பிரச்சினைகள் இருப்பதாக நண்பர்கள் சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

குறைகள் இருந்தாலும் ziddu வில் ஃபைல் அனைத்தையும் வைத்திருப்பதற்கு காரணம்;

1. Ziddu வில் மட்டும் தான் எத்தனை முறை வேண்டுமானாலும் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

2. டவுன்லோட் செய்வதற்கு தனியாக அக்கௌன்ட் ஏதும் தேவைஇல்லை.

3. இது ஒரு இலவச file sharing site.

4. டவுன்லோட் செய்யாவிட்டாலும் file களை delete செய்வது கிடையாது.

5. மற்றும் கால வரைமுறை கிடையாது.

எனவே இதுபோலே வேறு ஏதாவது file sharing site. இருந்தால் யாராவது குறிப்பிடுங்கள், என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.


Click to download.

Nov 3, 2009

வளர்பிறைக் கனவுகள் காஞ்சனா ஜெயதிலகர்





















கடந்தசில மாதங்களாக இணையத்திற்கு அடிக்கடி வரமுடியவில்லை. இது இன்னும் ஒன்றிரண்டு மதங்களுக்கு தொடரும் என்று நினைக்கிறேன். அதனால்தான் பின்னுட்டங்களுக்கு எப்போதாவது பதிலிடுகிறேன் பொறுத்தருள்க. இடைப்பட்ட நேரத்தில் வந்துசெல்லும் அணைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

நண்பர் vviji1975 எனக்காக நமது கடந்த பதிவை தமிழிஷில் பதிவிட்டிருக்கிறார் அவருடைய அன்புக்கு நன்றி மட்டும் சொன்னால் போதாது. அதனால் இன்று முடிவுசெய்துவிட்டேன் . உங்களுடைய அன்புக்கு கைமாறாக மேலும் அதிக புத்தகங்கள் தேடிப்பதிவிட்டு உங்களை அதிகம் படிக்க வைக்காமல் விடுவதில்லை என்று.

Click to download.
எழுதி வைத்தாய் என்னை ஜெய்சக்தி



















எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்.
-கவிஞர் வாலி

Click to download.

Oct 31, 2009

'வாசகர் பர்வம்' எஸ். ராமகிருஷ்ணன்

















புத்தகங்கள் மேல் இவர் கொண்ட காதல், எவ்வளவு தூரமானாலும் இவரை பயணப்பட வைக்கிறது. இவர் வாழ்வோடு பயணங்கள் கலந்திருக்கிறது. இவர் தன் வாழ்க்கை பயணத்தில் கடந்து வந்த சில மறக்கமுடியாத மனிதர்களை அறிமுகப்படுத்துகிறார் .


புத்தகத்தை மின்னஞ்சலில் அனுப்பிய திரு ஜனா அவர்களுக்கு நன்றி.



Click to download.

Oct 9, 2009

ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள் ப்ரியன்












காதலி, மழை, காதலன், கவிதை ஆகிய நான்கும் ஒன்றாய்க் கலந்த பிரிக்க முடியாக் கலவையே இந்தத் தொகுப்பு.


நின்ற பின்னும்

சிறிது நேரம்

இலை தங்கும் மழைப்போல

நின்றுபோன இடத்தில் எல்லாம்

கொஞ்சநேரமாவது தங்கிச்

செல்கிறது அழகு.



எப்போதிலிருந்து இப்படி எழுதுகிறீர்கள்

என்றாய்

நீ மழையில் நனைவது

கண்டதிலிருந்து என்றேன்

ச்சீ என வெட்கப்பூ பூத்தாய்

அடுத்த மழைப் பெய்யத் தொடங்கியது

நீயும் நனையத் தொடங்கினாய்

நானும் இன்னமும் அழகாய் எழுதத் தொடங்கினேன்.



எவ்வளவு பத்திரமாய்

நடந்தாலும்

உன்னையும் அறியாமல்

வழியெங்கும்

பெய்துகொண்டே

செல்கிறது

உன் அழகுமழை.



ஆகா!!! முழுக்க முழுக்க காதலும் கவிதையும் மழையாய்ப் பொழிகின்றன.



ஜன்னலில் பார்த்ததைவிடவும்

பக்கத்தில் பார்த்தல்

அழகு!

நீயும்!

மழையும்!




வார்த்தையாகக் கூட இல்லை

ஒரு எழுத்தாகக் கூட

இல்லாதவனை

ஒரு கவிஞனாய் மாற்றிய

பெருமை

உனக்கும்

மழைக்கும் மட்டுமே!



யாரைத்தான் காதலிக்கிறார் இவர்? மழையையா தன் காதலியையா?



மழை ரசித்தாலும்

உனை ரசித்தாலும்

நேரம் கடப்பதும் தெரிவதில்லை

உயிர் கரைந்து

ஓடுவதும் தெரிவதில்லை.


Click to download.





வண்ணத்துப் பூச்சியாய்.... ஜெய்சக்தி














தீபாவளியும் பொங்கலும்
வாழ்த்துக்களால்
ஞாபகப் படுத்தப் படுகின்றன;

வசந்தகாலத்தின் பெளர்ணமி
நிலவு இப்போது
தேய்பிறையில்;

காலத்தால் நிலையாமை
கட்டாயமாக‌
கற்பிக்கப் பட்டாலும்;

நிலையாக இருக்கும்.
ஆழ்கடலின் அடிமணலாய்
உன்
நினைவுகள்!.

Click to download.

தப்புத் தப்பாய் ஒரு தப்பு ராஜேஷ்குமார்













ராஜேஷ்குமார் - பி.எஸ்.சி., பி.எட்., படித்துவிட்டு, பள்ளிக்கூட ஆசிரியராக இருந்து படைப்பிலக்கியப் பாதைக்கு வந்தவர். 22 ஆண்டுகளாக நாவல் உலகில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள இவர், க்ரைம் நாவல் என்றால் உடனே நினைவுக்கு வருபவர். 1000 நாவல்களுக்கும் மேல் எழுதிக் குவித்துள்ள இவரின் ஆயிரமாவது நாவல் "டைனமைட்-98'.

தினமணி கதிருக்காக இவர் படைத்தளித்த தொடர்கதைதான் "தப்பு தப்பாய் ஒரு தப்பு'. தொடர்ந்து 26 வாரங்கள் வெளிவந்து வாசகர்களை மகிழ்வூட்டிய இத் தொடர்கதை புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது இன்டர்நெட் வாசகர்களுக்காக.

Click to download.
இருளுக்குபின் வரும் ஜோதி
















போய்வருகிறேன் என்று
சொன்னவுடன்
என்னை விட்டுவிட்டு
மனதைப் பிடித்து
வைத்துக்கொண்டாயே
இது என்ன நியாயம்?.



Click to download.

Oct 2, 2009

'எண் ஜோதிடம்'















ஒருவர் பிறந்தபோது பதிவு செய்த பெயர் எண்ணாக மாற்றப்படுகிறது.

1 2 3 4 5 6 7 8 9
A B C D E F G H I
J K L M N O P Q R
S T U V W X Y Z

இந்திய எண் சோதிடர்கள் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு கோளை ஒதுக்கி பலன் சொல்கிறார்கள். 1 - ஞாயிறு, 2 - கேது, 3 - குரு, 4 - இராகு, 5 - புதன், 6 - சுக்கிரன் (வெள்ளி ) 7 - சந்திரன், 8 - சனி, 9 - செவ்வாய்.

எண் சோதிடர்கள் பிறந்த திகதியையும் பெயரையும் கூட்டி வருகிற எண் அலையதிர்வுகளை (vibrations)எழுப்புவதாகச் சொல்கிறார்கள்.

சிலர் எண் சோதிடம் அறிவியல் அடிப்படையில் அமைந்த கலை என்கிறார்கள்!

எண்களை வைத்துக் கொண்டு ஒருவரது குணம், நடை, திறமை, வாழ்க்கையின் நோக்கம், துணையை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும், வாணிகம் எப்போது தொடங்க வேண்டும், என்பதை எல்லாம் கணித்துச் சொல்கிறார்கள்

உலகத்தில் இன்று வாழும் மக்களை 9 எண்களில் எண்சோதிடர்கள் அடக்கி விடுகிறார்கள். இதனால் ஒரே எண்ணில் உள்ள மக்களது விதி ஒரேமாதிரி இருக்க முடியுமா?

"புத்தகத்தை மின்னஞ்சலில் அனுப்பிய திரு அவர்களுக்கு நன்றி"

Click to download.

Sep 25, 2009

அவனும் அவளும்.


















எனக்குத் தெரிந்த தோழி ஒருவரின் தாம்பத்தியத்தில் எப்போதும் குளறுபடிகள் நடந்து கொண்டே இருக்கும். கணவருக்கும் மனைவிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் வந்து கொண்டே இருக்கும். மன அமைதிக்காக அவர் ரமணி சந்திரன் அவர்களின் நாவல்களைப் படிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு அவரின் வாழ்கையில் நிறைய மாற்றங்கள். அந்தப் புத்தகங்களின் மூலம் தான் வாழ்க்கையின் சாரத்தைப் புரிந்து கொண்டதாகவும் கணவன் மனைவிக்கிடையில் உண்டாகும் பல்வேறு பிரச்சனைகளைக் களைவதற்கு புரிந்துணர்வு ஒன்றே அவசியம் என்பதை உணர்ந்துக்கொண்டதாகவும் கூறினார்.


குடும்பம் என்பது ஓர் அழகிய தேன்கூடு. அதில் இருக்கும் தேனீக்களை அன்பால்தான் பிணைக்க முடியும். அந்த அன்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை ரமணி சந்திரன் அவர்களின் நாவல்கள் வலியுறுத்துகின்றன என்றால் மிகையில்லை.
நன்றி ரமணி சந்திரன் - ஓர் ஆய்வு என் உலகம்.


Click to download.


நழுவும் நேரங்கள் வாஸந்தி















மேல்நாட்டு விஞ்ஞான வாழ்க்கை முறை, இந்தியக் குடும்பங்களை ஊடுருவி, எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது!. அடித்தளம் இந்தியப் பண்பாட்டில் அமைந்திருந்த போதிலும், அதன்மீது அமைக்கப்படும் வாழ்க்கை என்னும் கட்டடம், மேல்நாட்டுச் சிந்தனைகளால் மாற்றம் பெற்றுள்ளது.


புதுமையும் பழமையும் கலந்த, இந்தப் புது விதமான வாழ்க்கை முறை, ஒவ்வோர் இந்தியக் குடும்பத்திலும் பல பிரச்சினைகளை எழுப்பிக் கொண்டிருக்கிறது.


வாழ்க்கை என்பது இரயில் பயணம் அன்று, கருது வேறுபாடு ஏற்பட்டால், பிரிந்து சென்று மறந்துவிடுவதற்கு, நான் என்னும் அகங்காரத்தை அடக்கி, விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்தான், இல்லறம் இனிய வீனையாகும். இக்கருத்தை அழகாகப் பின்னியிருக்கிறார் ஆசிரியர் வாஸந்தி.
Click to download.

Sep 16, 2009

அடிப்படைத் தமிழ் இலக்கணம். எம்.ஏ. நுஃமான்














சிறிது நாட்கள் இணையத்திற்கு வர இயலவில்லை. அதுவரை இங்கு வந்து சென்ற அணைத்து தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி. சில நண்பர்கள் மின்அஞ்சலில் நலம் விசாரித்து இருந்தனர் அவர்களின் அன்புக்கு நன்றி என்று சொன்னால் போதாது, தலை வணங்குகிறேன்.

நண்பர் திரு அவர்கள் சில புத்தகங்களை பதிவிடசொல்லி மின்னஞ்சலில் அனுப்பிவைத்தார். அவற்றை பெருமையாக இங்கு பதிவிடுகிறேன்.

"சுற்றிச் சுழன்று, சூறாவளிகள் பல கடந்து, நெருப்பாற்றில் நீந்தி தப்பி உயிர் பிழைத்து, ஐந்து கண்டங்களிலும் அடங்கியுள்ள பல தேசங்களிலும் பரவி விரவிக் கிடக்கும் தமிழர்களின் நெஞ்சில் சுடர் விட்டு எரியும் தமிழுணர்வை போற்றும் விதமாக திரு. எம்.ஏ. நுஃமான் அவர்களின் ''அடிப்படை தமிழ் இலக்கணம்'' என்கிற இந்த சிறந்த நூலை தாங்கள் வெளியிட்டு பல கோடி தமிழர்களின் மொழி அறிவை மேலும் செம்மைப்படுத்த உதவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்களன்புள்ள
"திரு"


இதுபோல உங்களிடம் நல்ல புத்தகங்கள் இருந்தால் அனுப்பிவையுங்கள் பதிவிட்டுவிடுகிறேன்.

Click to download.

Jul 21, 2009

100 வது பதிவு

எனக்கு புத்தகங்கள் பிடிக்கும்.












ஊரை விட்டு வெகு தூரத்தில் இருக்கும் என்போன்றவர்களுக்கு உடனடியாக புத்தகங்கள் கிடைத்து விடுவதில்லை. வலையில் தேடியபோது கொஞ்சம் கிடைத்தது. அதை அப்படியே எல்லோருக்கும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி பதிய ஆரம்பித்து இப்போது 100 வது பதிவை எட்டி சதம் அடித்து விட்டது.

இந்த நேரத்தில் சிலபேருக்கு நன்றி சொல்லுவதற்கு கடமைப்பட்டுள்ளேன்.

இணையத்தில் என்போன்றோர் எளிதாக பதிவிட்டாலும், யாரோ ஒருவர் அந்த மென்புத்தகங்களை மிகக் கவனமாக தேடி எடுத்து அல்லது ஒவ்வொரு பக்கங்களாக ஸ்கேன் செய்து அதன் பின்புலத்தில் மிககடினமாக தங்களது உழைப்பை செலவிட்டிருக்கவேண்டும். எனவே அந்த முகம் தெரியாத தங்கத் தமிழ் உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்.

திரு. அருள்ராஜ் அவர்களின் booksforpeople.blogspot.com. இந்த தளத்தில்தான் தமிழில் மென்புத்தகங்கள் இருப்பதை முதன்முதலில் அறிந்தேன். அதன் பிறகு திரு. pkp.in மற்றும் சில தளங்கள். இவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகள். இவர்களில் திரு அருள்ராஜ் இப்போது பதிவதை நிறுத்திவிட்டார் என்று நினைக்கிறேன்.

முதலில் அதிகமான நேரம் இணையத்தில் உலவ முடிந்தது. இப்போது வேலைப்பளு மற்றும் வேறுசில காரணங்களால் முன்புபோல இணையத்தில் அதிக நேரம் செலவிட முடியவில்லை எனவே முன்புபோல அடிக்கடி பதிவிட இயலவில்லை.

சில நண்பர்கள் இந்த பதிவின் முலம் கிடைத்துள்ளார்கள். நண்பர் திரு. அவர்கள் மாயவலை புத்தகத்தை படித்து அதன் மீதி பக்கங்களை கண்டறிந்து அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைத்துள்ளார் (இப்போது முழு புத்தகத்தையும் மறுபடி டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்). மற்றும் சில நண்பர்களும் அவ்வப்போது மின்னஞ்சல் செய்வது உண்டு. அவர்களுக்கும் மற்றும் இந்த தளத்தை தொடர்ந்து வந்து கொண்டிருப்பவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

திருமதி. ரமணிச்சந்திரன் அவர்களுக்கு, உங்களின் எழுத்துக்களின் மீது தீராத ஆசை கொண்ட ரசிகர்களின் வேண்டுகோள்.


இந்த தளத்திற்கு அதிகமானவர்கள், திருமதி.ரமணிச்சந்திரன் நாவல்களை தேடித்தான் வருகிறார்கள். ஆனால் ziddu விலிருந்து அணைத்து நாவல்களும் delete செய்யப்பட்டு விட்டது. இது புத்தகங்களின் உரிமையாளர் அல்லது பதிப்பகத்தின் முயற்சியாகத்தான் இருக்கும்.

கண்டிப்பாக அவர்களின் பார்வையில் இது சரியான செயலாகத்தான் இருக்கமுடியும். அதேநேரத்தில் அவர்களுக்கு புத்தகப் பிரியர்களான எங்களிடமிருந்து ஒரு வேண்டுகோள்.

நாங்கள் உங்களின் தீவிரமான ரசிகர்கள், மற்றும் வெளியூர்/வெளிநாட்டில் குடியிருப்பவர்கள். நாங்கள் ஊரில் இருக்கும்போது உங்களின் ரசிகர்களாக இருந்து உங்களின் புத்தகங்களை தவறாமல் கடைகளில் வாங்கி படித்தவர்கள்.

இப்போது பிழைப்புக்காக வெளியூர்களுக்கு வந்தும், உங்களின் புத்தகங்களின் மீதும், எழுத்துக்கள் மீது தீராத ஆசை கொண்டிருப்பவர்கள்.

நமது ஊர்களைப்போல் வெளியூர்களில், வெளிநாடுகளில் உங்களது புத்தகங்கள் கிடைப்பது கிடையாது. அதனால்தான் எங்களைப்போன்றோர் மென்புத்தகங்களைத் தேடுகின்றோம்.

படிப்பதற்கு அசெளகரியமாக இருந்தாலும் உங்கள் எழுத்துக்களின் மீதுள்ள மோகம், எங்களை மென்புத்தகங்களாகவேனும் படிக்க தூண்டுகிறது. இதன்மூலம் எந்தவிதத்திலும் தமிழ்நாட்டில் தங்களது புத்தகங்களின் விற்பனை குறையாது. மேலும் நம்நாட்டில் பொதுவாக யாரும் மென்புத்தகங்கள் படிப்பதும் கிடையாது.

இதுபோன்று மென்புத்தகங்களை படிக்கும்போது அதன்மீது ஆசை கொண்டு நமது நாட்டுக்கு வந்து அதனை புத்தகமாக வாங்கவே விரும்புகிறோம். எனவே மென்புத்தகங்களை படிக்கும் எங்களை தவறாக எண்ணவேண்டாம். இதுபற்றிய திரு. pkp அவர்களின் பதிவு http://pkp.blogspot.com/2008/03/blog-post_25.html


YOU CAN WIN


WINNERS DON'T DO DIFFERENT THINGS, THEY DO THINGS DIFFENTLY.














பொதுவாக ஆங்கில புத்தகங்கள் படிப்பது கிடையாது ( அந்த அளவிற்கு சரக்கு இல்லேங்கோ). ஆனால் இந்த புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது என்று கேள்விப்பட்டு வாங்கி புரட்டினேன்.

மிகவும் எளிதாக புரிந்துகொள்ளும் விதத்தில் இருக்கும் ஆங்கிலம் முதலில் என்னைக் கவர்ந்தது. பின்பு தான் சொல்லவந்ததை ஒரு கதைமூலம் விளக்குவது மற்றும் ஏதேதோ செய்து புத்தகத்தை படிக்கவைத்து ஒரு புயலையே ஏற்படுத்திவிட்டார். உதாரணத்துக்கு ஒன்று
A boy was flying a kite with his father and asked him what kept the kite up. Dad replied,"The string." The boy said, "Dad, it is the string that is holding the kite down." The fatherasked his son to watch as he broke the string.

Guess what happened to the kite? It came down. Isn't that true in life? Sometimes the very things that we think are holding us down are the things that are helping us fly. That is what discipline is all about.

இந்த புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு கிடைத்தால் தாருங்கள் பதிவிட்டுவிடுகிறேன்.

Click to download.



மனிதனுக்குள் ஒரு மிருகம் -மதன்















எல்லா மனிதர்களுக்குள்ளேயும் இருண்ட பகுதிகள் உண்டு. அதற்குள்ளே புகுந்து பார்ப்பதை நாம் தவிர்த்தால், நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம் என்று அர்த்தம்!.

ஒவ்வொரு மனிதனும் தனக்குள் பதுங்கியிருக்கும் மிருகத்தைப் புரிந்து கொண்டால்தான் அதைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

மனோதத்துவ மேதை சிக்மன்ட் ஃப்ராய்டு எல்லா மனிதர்களுக்கு உள்ளேயும் வன்முறை உணர்வுகள் இருக்கிறது. எப்படிப்பட்ட மோசமான குற்றத்தையும் செய்யத் தூண்டும் வெறி உணர்வு அவனுடைய ஆழ்மனதில் தங்கியிருக்கிறது. ஓரளவுக்கு அதைக் கட்டுப்படுத்துவது சமூகக் கட்டுப்பாடும் சமுதாய சட்டதிட்டங்களும், பின்விளைவுகளும், குற்ற உணர்வும்தான்! என்கிறார்.

மொத்தத்தில் நாம் நல்லவர்களும் அல்ல... கேட்டவர்களும் அல்ல! வெளியே மனிதன், உள்ளே மிருகம் -இரண்டும் சேர்ந்த கலவைதான் நாம்!

இந்தத் தலைப்பில் ஒரு தொடரை எழுதுகிறேன் என்று ஆர்வத்தில் சற்று அவசரப்பட்டு ஜீ.வி. ஆசிரியரிடம் ஒப்புக்கொண்டு விட்டேனோ என்று எழுத உட்கார்ந்தவுடன் தோன்றுகிறது. தொடர் என்பது நதி மாதிரி! அதன் கூடவெ கரையிலும் படகிலும் பயணிக்க முடியும். நான் தற்போது பயணிக்கப் பொவதோ கடலில். ஆரம்பம் முடிவில்லாத பெருங்கடல். -மதன்.

Click to download.



தமிழ் புத்தக ஆர்வலர்களுக்கு. ஒரு புதையல்






மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சி. 1998-ம் ஆண்டு தமிழர் திருநாள் (பொங்கல்) அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயன்று வருகின்றது.

உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர். மதுரைத் திட்டம் உலகில் பல நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் அவரவர் தங்களது வீடுகளில் தனியார் கணினி கொண்டு கிடைக்கும் நேரங்களில் தமிழ் இலக்கியங்களை கணினியில் உள்ளிட்டு (அ) பிழை திருத்தி மின்பதிப்புகளாக தயாரிக்கும் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் இலக்கியங்களை மின்வழி பாதுகாத்து மற்றவர்களுடன் இலவசமாக பகிழ்ந்து கொள்வதில் விருப்புள்ள அனைவரும் இத்திட்டதில் பங்கு பெறலாம்

மதுரைத் திட்டத்தைப் பற்றி மற்ற விவரங்களையும் தமிழ் நூல்களின் மின்பதிப்புக்களையும் இந்த இணைய தளத்தின் பக்கங்கள் மூலமாக இலவசமாக பெறலாம்.

Click for a புதையல்.


அப்புறம் சந்திக்கலாம் அதுவரைக்கும் எல்லோரும் வந்து பார்க்கிறதுக்கு தமிழிஷில் ஒரு ஓட்டு போட மறந்துராதிங்க.

Jul 14, 2009

மகாராஜாவின் ரயில் வண்டி அ. முத்துலிங்கம்















கீத் மில்லர் சொல்கிறார், 'உண்மையான கதைகளை எழுதவேண்டாம், யாரும் நம்பமாட்டார்கள். உண்மைத் தன்மையான கதைகளை எழுதுங்கள்'. அப்படித்தான் இந்தக் கதைகளும்.


எல்லாமே உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் கணிசமான அளவு கற்பனை வாசம் கலக்கப்பட்டவைதான். நாலுவருடங்களாக எழுதிச் சேர்த்தவை இவை.


கணையாழி, காலச்சுவடு, இந்தியா டுடே, ஆனந்த விகடன், சதங்கை, காலம், உயிர் நிழல், அம்மா, சொல் புதிது போன்ற இதழ்களில் வெளியானவை. ஆப்பிரிக்கா, கனடா, போஸ்னியா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், இலங்கை என்ற உலக நாடுகளின் பின்னணியில் எழுதப்பட்டவை.


கடல் ஆமையின் வாழ்க்கை விசித்திரமானது. பெண் ஆமைகள் இரவில் நீந்திவந்து கடற்கரை மணலில் குழி பறித்து முட்டைகள் இட்டுவிட்டுப் போய்விடும். அதற்கு பிறகு அவை திரும்பிப் பார்ப்பதேயில்லை.



வெளியே வந்த குஞ்சுகள் நாலா பக்கமும் சிதறி ஓடத் தொடங்கும். இறுதியில் தண்ணீரின் திசை அறிந்து வழி தேடி கடலில் போய் சேர்ந்து கொள்ளும்.



நான் எழுதிக்கொண்டே இருக்கிறேன். எங்கோ ஒரு வாசகர், என் எழுத்தை முற்றிலும் உணர்ந்தவர் காத்திருக்கிறார். என்னுடைய படைப்புகள் எப்படியோ வழி தேடி அவரிடம் போய்ச் சேர்ந்துவிடும். இந்த நூல் அந்த வாசகருக்கு: அந்த உலகத்துக்கு.




Click to download.

Jul 7, 2009

கடல் கடந்து கரையேறலாம்! ஏற்றுமதிக்கு ஒரு என்சைக்ளோபீடியா.








சென்னையைச் சுற்றிப் பார்க்கவந்த ஒருவர் மயிலாப்பூரில் ஒரு டிபன் கடையில் இட்லி சாப்பிட்டிருக்கிறார். மல்லிகைப் பூவாக இருந்த இட்லி அவர் மனதைக் கவர்ந்துவிட, இதை தினமும் சிங்கப்பூரில் உள்ள என் ஓட்டலுக்கு அனுப்ப முடியுமா? என்று கேட்டிருக்கிறார். இப்போது அதிகாலையில் சட்னி, சாம்பார் சகிதமாக சிங்கபூருக்குப் பறக்கிறது மயிலாப்பூர் இட்லி!

இட்லி இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு வியாபார வித்தை உங்கள் உங்கள் கையில் இருக்கலாம். அப்படி இருக்கும்போது நீங்கள் ஏன் ஏற்றுமதியில் இறங்கக் கூடாது?. ஏற்றுமதி என்றாலே கோடிக்கணக்கான ரூபாய்க்கு தாதுக்களையும், கனிமங்களையும்தான் அனுப்பவேண்டும் என்பதில்லை. அது ரொம்பவே சிம்பிளான விஷயம்தான்....

எனக்கு சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியாது.
நான் குக்கிராமத்தில் இருக்கிறேன்..
நான் கல்லூரிப் படிப்பெல்லாம் படிக்கவில்லை
எனக்குத் தொழில்நுட்பம் தெரியாது...
என்னால் பெரிய அளவில் மூலதனம்போடமுடியாது...'

ஏற்றுமதித் தொழிலில் ஈடுபடாமல் தயங்கிநிற்பதற்கு இன்னும் என்னெவல்லாம் உங்களால் காரணம் சொல்லமுடியுமோ எல்லாவற்றையும் சொல்லுங்கள் அதற்கு ஒருஸ்ட்ராங்கான பதில் இருக்கிறது. அந்த பதில்...இஸ்மாயில் கனி!......

ஏற்றுமதி ஆவணங்கள் பட்டியல் நீளமாகப் போய்க்கொண்டே இருக்கிறதே என்று மலைத்து நின்றுவிடாதீர்கள். பார்ப்பதற்கும்படிப்பதற்கும் பக்கம் பக்கமாகத் தோன்றும் இந்த விஷயங்கள்உள்ளே நுழைந்த பிறகு மிக எளிதாகத் தோன்றும்....

நாணயம் விகடனில் இத்தொடரை எழுதிய ஆர்.அசோகன், எம். ஏ. டி.சி. பி, போன்ற பல பட்டங்களோடு பன்னாட்டு வணிகம் தொடர்பான விஷயங்களில் கால் நூற்றாண்டுக்கு மேல் அனுபவம் இருக்கிறது. மத்திய அரசு, தென்னிந்திய மாநிலங்களுக்கு சிறப்பு ஏற்றுமதி கொள்கையை வடிவமைக்கத் தேவையான விஷயங்களை அளித்திருக்கிறார்..

குளத்தில் குதிக்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது.ஆனால், என்ன செய்தால் தண்ணீரில் மூழ்காமல் தப்பிக்கலாம்...நமக்கு அடிப்பைடயான தேவைகள் என்னன்ன என்பனவற்றை முதலிலேயே தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா..
Click to download.

நிறையப்பேர் அறிந்து கொள்ள தமிழிஷில் ஓட்டுபோட மறந்துவிடாதீர்கள்.

Jun 30, 2009

ஆரம்ப விண்ணியல்















சந்திரன் 27 நாள் 7 மணித்தியாலத்தில் ஒருமுறை பூமியைச் சுற்றுகிறது. இதன் பாதையும் நீள்வளைய வடிவமாக இருப்பதால் பூமியிலிருந்து இதன் தூரம் எப்போதும் ஒரே அளவாக இருப்பதில்லை. பூமியில் இரண்டு இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் சந்திரன் இருக்கும் கோணங்களையும் அந்த இரண்டு இடங்களின் இடைத் தூரத்தையும் அறிந்தால் இவற்றிலிருந்து சந்திரனின் தூரத்தை மிகவும் இலகுவாக கணிக்கலாம்.....

பூமியிலிருந்து ஒரு கல்லை 11.2 கி.மீ. (7 மைல்) வேகத்துடன் ஒரு கல்லை எறிய முடியுமானால் அக்கல்லானது அப்படியே மேல்நோக்கிச் சென்றுகொண்டேயிருக்கும், பூமிக்குத் திரும்பி வராது. இந்த வேகத்தைத் தப்பும் வேகம் velocity of escape என்பர். சந்திரனில் தப்பும் வேகம் 2.4 கி.மி. ஆகும்....

கிரகங்களில் மிகவும் அடர்த்தி குறைந்தது சனியாகும். இதன் சார்படர்த்தி 0.7. நீரிலும் பாரம் குறைந்தது. ஒரு பிரமாண்டமான சமுத்திரத்தில் இதனை வைத்தால் இது மிதக்கும்....

1910 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி ஹாலியின் வால்வேள்ளியின் வலுக்கூடாகப் பூமி சென்றது. அப்போது அதன் வால் ஏறக்குறைய 3.2 கோடி கி. மி. நீளம் இருந்தது. வால்வெள்ளியின் தலை பூமியுடன் மோதினால் ஆபத்து ஏற்படலாம், ஆனால் அதன் வால் எவ்வித கெடுதியையும் விளைவிக்காது...

ஏராளமான சுவாரசியமான தகவல்கள் இப்புத்தகத்தில் நிறைந்துள்ளது.

Click to download.


நிறையப்பேர் இத்தளத்தைப் பற்றி அறிந்து கொள்ள தமிழிஷில் ஓட்டுபோட மறந்துவிடாதீர்கள்.

Jun 12, 2009

விடுதலை அன்ரன் பாலசிங்கம்

கட்டுரைத் தொகுப்பு















ஒரு தடவை சென்னைத் துறைமுகம் ஊடாக ஆயுதங்களைத் தருவிக்க முயன்றோம். எமக்கான நவீன ஆயுதங்கள் அடங்கிய கொள்கலனுடன் வெளிநாட்டுக் கப்பல் ஒன்று சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. துறைமுகம் ஊடாக ஆயுதக் கொள்கலனை வெளியே எடுக்க நாம் செய்த பகீரத முயற்சிகள் பயனளிக்கவில்லை. எம்.ஜி. ஆரின் உதவியை நாடுவதே ஒரேஒரு வழியாக எனக்குத் தென்பட்டது.....


இப்பொழுது தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் என்ற சொல்லை உச்சரிப்பதே சட்டவிரோதமான ஒரு குற்றச் செயலாகக் கருதப்படுகிறது. எம். ஜி.ஆர் அவர்கள் அன்று ஈழ மக்களின் விடுதலைக்காக மிகவும் துணிச்சலான காரியங்களைப் புரிந்து எமக்கு கைகொடுத்து உதவியிருக்கிறார்.

1997 ஜூலையில், புதுடில்லியில் நிகழ்ந்த சந்திப்பின் போது, முன்னாள் இந்தியப் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கும் மத்தியில் ஒரு இரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது......

உலக வரலாற்று இயக்கத்திற்கு ஒரு முடிவு இருக்கின்றதா? எத்தகைய புறநிலையில் வரலாறு தனது பயணத்தை முடித்துக் கொள்கிறது? அன்றி, மானிட வரலாறானது ஒரு முடிவில்லாப் பயணத்தில், தொடர்ச்சியாக கட்டவிழ்ந்து செல்லுமா?...

திரு. அன்ரன் பாலசிங்கத்தின் எண்ணங்களின் ஊடாக ஒரு வித்தியாசமான பார்வை கிடைப்பது என்னவோ உண்மைதான்.


Click to download.

Jun 6, 2009

மந்திரச்சொல் எஸ். கே. முருகன்

ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு மந்திரச் சாவி இருக்கிறது, அதனைக் கண்டுபிடித்து சரியாகப் பயன்படுத்துபவர்கள் வாழ்வில் வெற்றிப் படிக்கட்டில் ஏறுகிறார்கள்.













நல்ல மனிதனாக மட்டுமல்ல, மிகச் சிறந்த வெற்றியாளராகவும் ஆக்கும் வல்லமை சொற்களுக்கு உண்டு.


ஒரு சாதாரண இளைஞனான ஆபிரகாம்லிங்கைன அமெரிக்க ஜனாதிபதியாக்கியது, ‘நீ எதுவாக மாற விரும்புகிராயோ, அதுவாகவே மாறுவாய்!’ என்ற வார்த்தைகள்தான். அதுபோல்,, ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’ என்று தன் தாய் சொல்லக் கேட்ட சிவாஜி, ஒருபோதும்தொல்வியையே நெருங்கவிடாத மாவீரன் ஆனார்.

இதுபோன்ற சான்றுகள் பலவற்றை சரித்திரத்தில் காணலாம். அத்தகையச் சம்பவங்கேளாடு, இலட்சியவாதிகளாகத் தங்களை மாற்ற உறுதுணையாக இருந்த பல்வேறு மந்திரச் சொற்களை வாசகர்களின் மனதில் பதியச் செய்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் எஸ். கே. முருகன்.

இரத்தினச் சுருக்கமாக, மூன்றே பக்கங்களில் ஒவ்வொரு சரித்திரச் சாதனையாளர்களின் முழு வரலாற்றைப் படித்த திருப்தி ஏற்படுவது இந்தப்புத்தகத்தின் இன்னொரு சிறப்பு.‘ஆனந்த விகடன்’ இதழில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களிடையே மந்திரச்சொல்லானது இந்த மந்திரச்சொல்.



Click to download.

May 29, 2009

நான் உன்னை நீங்கமாட்டேன்














ஒரு நிகழ்ச்சி

ஆடுகள் கூடையில் கொட்டிவைக்கப்பட்ட காய்ந்த புற்களை மேன்றுகொண்டிருந்தன. அமர் கைகளை குறுக்காகக் கட்டி மேலே பார்த்துக்கொண்டிருந்தார். எப்படி இருக்கீங்க அமர்?.

நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க. ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க?

கொஞ்சம் வேல அதிகம். ஊருக்கு போகனும்னு போனமுறை சொன்னீங்க தானே?.

ஆமா லீவு கேட்டிருக்கிறேன். அரபி ஒன்னும் சொல்லமாட்டேங்கரான். எப்பயும் நான் ரம்ஜான் முடிஞ்சுதான் போவது வழக்கம். இந்த முறையும் அப்படி போனு சொல்லிருவான்னு பயந்துக்கிட்டிருக்கேன். பாப்போம் கொடுத்துருவான்னு நெனைக்கிறேன்.

அதான் வீட்டு நெனப்பு வந்து இப்படி மேலே பார்த்துக்கிட்டு இருக்கீங்கள். டிக்கெட் எல்லாம் எடுத்தாச்சா. இப்பவே எடுதிருங்கள் கொஞ்சம் கம்மியா இருக்கு.

எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை, அரபி தானே எடுத்து தருவான். ப்லாக் பண்ணி வச்சிருக்கேன்.

பையன் கூட பேசுவீங்கதானே?

பையன் இல்ல சார்; பொண்ணு. ஒன்றரை வயது ஆகுது.

பேசுவாளா?.

எப்ப போன் அடிச்சாலும் அவதான் எடுப்பா. எடுத்துகிட்டு எதாவது பேசிக்கிட்டு இருப்பா. இப்ப கூட அங்கிருந்து தான் வரேன் அழுதிட்டா.

ஒங்க பொண்ணு அழுதாளா?, நீங்களா?

ம்... ம்... அது வந்து எனக்குத்தான்.. கண்ணீர் தானாகவே வந்துரும். போனை காதிலேயே கொஞ்சநேரம் வைத்திருப்பேன் அப்புறம் நேரம் ஆனதும் கட் பண்ணீட்டு வந்துருவேன்.

இங்க வரும்போது எத்தனை மாதம்?.

மூனு மாதம் வயித்தில. வந்து கொஞ்சநாள் தூங்கவே முடியல.

இரண்டு வருடம் ஆகும் வரைக்கும் புள்ளைங்கள பிரிய மனசு வராது. இந்த தடவை போய் ரொம்ப நாள் இருந்துட்டு வாங்க.

உங்க வொஃப் எப்படி?.

ஒவ்வரு தடவை போன் செய்யும் போதும் இந்த முறை இரண்டு வருடம் இருந்துட்டு போங்கள் என்றுதான் சொல்லும்.

அப்புறம் என்ன நீங்க தான் இங்கவந்து பத்துவருடம் ஆயிருச்சில்ல போயிட்டு ஒரு இரண்டு வருடம் கழிச்சி வாங்க.

நானும் அதைத்தான் யோசிச்சேன் ஆனா..

அனா?..

அதுக்கு அப்புறம் இதைப்போல பிரச்சனை இல்லாத அரபி வீடு கிடைக்காது பாருங்க!...

ஒரு புத்தகம்.

நான் உன்னை நீங்கமாட்டேன் - உமபாலகுமார்


Click to download.

May 27, 2009

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்
பிரசவம் இரா. முருகன்











சுஜாதாவால் சுட்டிக்காட்டப் பட்ட எழுத்தாளர்களில் ஒருவர் இரா.முருகன்.

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்’ சென்னை ஸ்நேகா பதிப்பகம் வௌயீடாக வந்தது. மார்ச் 2000-ல் சுஜாதா வௌயிட்டது இப்புத்தகம்.


மூடுவண்டித் திரைக்குப் பின்
முனகிநீ புரண்டிருக்கக்
காற்றணைக்கும் லாந்தர்
கைப்பிடித்துக் கூட வந்து
ஊர் உறங்கும் வேளை
பேர்தெரியா மருத்துவச்சி
வாசலிலே நின்றபோது
பேச்சுக் குரலெழுந்து
நித்திரை கலைந்த
நாய்கள் அதட்டும்.

பின்னிரவுப் பனியும்
பீடிப் புகையுமாய்
வாசலிலே நின்று
வானம் வெறித்திருக்க,
வெள்ளம் அழித்த அறுவடையை,
வீட்டுச் சுவர்கள் விழுந்ததை,
நீல மூக்குத்தி கடன்
நிலுவையில் மூழ்கியதை,

பால் மரத்த பசுமாட்டை,
பஸ் அடித்த வெள்ளாட்டை,
ஆயிக்குத் திவசம் தர
அய்யருக்கு அலைந்ததை,
காளிக்குத் தரவேண்டிய
கழுத்தறுத்த சேவல்களை,
ஆசையாய் நீ கேட்டு,
வாங்காதுபோன
வட்டுக்
கருப்பட்டியைச்
சுற்றும் நினைவுகள்
சூழ்ந்து குழம்ப,
நேரம் மறந்து நின்றபோது
ஆரோ வந்து சொன்னார்
அழகான குழந்தையென்று. *

ஆற்றுச் சலசலப்பில்
காலை விடிந்தபோது
உலகம் புதுசாச்சு
உள்ளமும் நேராச்சு.



கணையாழியில் முதல் படைப்பாக ஒரு புதுக் கவிதை பிரசுரமானதோடு இவருடைய எழுத்துலகப் பிரவேசம் தொடங்கியது.
கவிஞராக அறியப்பட்டு பின் சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக முகிழ்ந்தவர். இலக்கியப் பத்திரிகைகளிலும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் இவருடைய படைப்புகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டுள்ளன.




Click to download.
சமுதாயவீதி 'தீபம்' நா. பார்த்தசாரதி

'சமுதாயவீதி' நாவல் சாகித்ய அகாதமி விருது பெற்றது.










நா.பா. அவர்களுக்கு சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நதிக்குடி. மகாகவி பாரதியார் ஆசிரியராய் இருந்த மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றியவர்.

இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். வணிக நோக்குடனான பத்திரிகைகளுக்கிடையே, குன்றிலிட்ட தீபம் போல் "தீபம்" பத்திரிகை ஒளிர்ந்தது. ஏறத்தாழ 23 ஆண்டுகள் ஒரு தவம் போல, ஓர் இலக்கியப் பத்திரிகையைத் தமிழகத்தில் வெளிக்கொணர வேண்டுமானால், அது லேசுப்பட்ட காரியமில்லை; அந்த அசகாயச் செயலை, மிகுந்த தைரியத்துடன் நிறைவேற்றிக்காட்டி நா.பா. தமிழ்கூறும் நல்லுலகில் சாதித்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன.

நாற்பத்தைந்து வயதிற்குமேல் எம்.ஏ. படித்துத் தேறி, டாக்டர் பட்டத்திற்குப் பதிவு செய்துகொண்டார். பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் என் தலைப்பில் ஆய்வேட்டினையும் சமர்ப்பித்தார். ஆனால் டாக்டர் பட்டம் கிடைக்க இரண்டே நாட்கள் இருந்த நிலையில் இதய நோய்க்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுக் காலமானார்.
நன்றி -விக்கிபீடியா


Click to download.

May 17, 2009

Privacy Policy for www.tamilebooksdownloads.blogspot.com

Privacy Policy for www.tamilebooksdownloads.blogspot.com If you require any more information or have any questions about our privacy policy, please feel free to contact us by email at pvekosri@gmail.com. At www.tamilebooksdownloads.blogspot.com, the privacy of our visitors is of extreme importance to us. This privacy policy document outlines the types of personal information is received and collected by www.tamilebooksdownloads.blogspot.com and how it is used. Log FilesLike many other Web sites, www.tamilebooksdownloads.blogspot.com makes use of log files. The information inside the log files includes internet protocol ( IP ) addresses, type of browser, Internet Service Provider ( ISP ), date/time stamp, referring/exit pages, and number of clicks to analyze trends, administer the site, track user’s movement around the site, and gather demographic information. IP addresses, and other such information are not linked to any information that is personally identifiable. Cookies and Web Beacons www.tamilebooksdownloads.blogspot.com does not use cookies. DoubleClick DART Cookie .:: Google, as a third party vendor, uses cookies to serve ads on www.tamilebooksdownloads.blogspot.com..:: Google's use of the DART cookie enables it to serve ads to users based on their visit to www.tamilebooksdownloads.blogspot.com and other sites on the Internet. .:: Users may opt out of the use of the DART cookie by visiting the Google ad and content network privacy policy at the following URL - http://www.google.com/privacy_ads.html Some of our advertising partners may use cookies and web beacons on our site. Our advertising partners include ....Google AdsenseThese third-party ad servers or ad networks use technology to the advertisements and links that appear on www.tamilebooksdownloads.blogspot.com send directly to your browsers. They automatically receive your IP address when this occurs. Other technologies ( such as cookies, JavaScript, or Web Beacons ) may also be used by the third-party ad networks to measure the effectiveness of their advertisements and / or to personalize the advertising content that you see. www.tamilebooksdownloads.blogspot.com has no access to or control over these cookies that are used by third-party advertisers. You should consult the respective privacy policies of these third-party ad servers for more detailed information on their practices as well as for instructions about how to opt-out of certain practices. www.tamilebooksdownloads.blogspot.com's privacy policy does not apply to, and we cannot control the activities of, such other advertisers or web sites. If you wish to disable cookies, you may do so through your individual browser options. More detailed information about cookie management with specific web browsers can be found at the browsers' respective websites.

May 11, 2009

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்














புத்தகத்தில் ஜோதிடரத்னம் கிரகங்களுக்கும் மனித உயிர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்லுகிறார். ஒருவகையில் எல்லா ஜோதிடர்களும் அதையே தங்களுக்கு ஆதாரமாக வைத்திருக்கிறார்கள்.

சிறுவயதில் இருந்து சில வகையான சந்தேகங்கள் முழுமையாய் விளக்கப்படாமல் என்னுள் உள்ளது.

மனநிலை சரியில்லதவர்கள் அமாவாசை பௌர்ணமி நாட்களில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ஏன்?

அமாவாசை பௌர்ணமி நேரங்களை கணத்த நாட்கள் என்றும் அந்த நாட்களில் பெரிசுகள் "போகும்" வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது என்றும் சொல்வார்கள். ஏன்?.

தேன் எடுக்கப்போகும் போது அமாவாசை பவுர்ணமி பார்த்து எடுக்கவேண்டும் என்றும் சொல்வார்கள். ஏன்?.

இது எல்லாம் சந்திரன் நம்மீது, நமது செயல்பாடுகள் மீது influence செய்கின்றது என்று கொள்ளலாமா?

அப்படிஎன்றல் ஜோதிடம் உண்மையானது தானா????..

என்வரையில் ஜோதிடம் முழுமையாய் உண்மையென்றால் அதிலிருப்பவை ( அதாவது ஜோதிடக் கட்டங்கள் சொல்பவை ) நடந்தே தீரும், நம்மால் மாற்றமுடியாது. எனவே கவலைப்படத்தேவை இல்லை.

ஜோதிடம் முழுமையாய் பொய் என்றால், அதற்கும் கவலைப்படத்தேவை இல்லை.

சரியா?

இனி புத்தகம் பற்றி..

இதில் 'ஜோதிடரத்னம்' S.சந்திரசேகரன் அவர்கள் குறைந்த அளவு கல்வி அறிவு உள்ளவர்களும் வடமொழி தெரியாதவர்களும் கூட ஜோதிடம் கற்கவேண்டும் என்று எளிதாக விளக்கியுள்ளார். ஆர்வமுள்ளவர்களுக்கு சரியான வழிகாட்டி.


Click to download.



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Blog Archive

Popular Posts