அழுக்கு உடைகளுடன் நின்ற என்னைப் பார்த்து, நிர்மலானந்தா புன்னகைத்தார். நான் சற்றும் எதிர்பாராதவிதமாக, குனிந்து என் பாதங்களைத் தொட்டார்.
அதுவரை கோயில்களில்கூட குனிந்து வணங்க மறுத்தவன் நான். விறைப்பாகவும் உறுதியாகவுமே இருந்து பழகியிருந்தேன். என் பாதங்களை அவர் தொட்டதும் எனக்குள் இறுக்கமாக இருந்த எதுவோ உடைந்தது, கரைந்தது.
அதன்பின் அவரைப் பார்க்கப் பல முறை சென்றதுண்டு. அப்போது எனக்குள் எந்த ஒரு ஆன்மிகத் தேடலும் இல்லை. ஆனாலும் எங்களுக்குள் பேச்சே இல்லாமல் மெல்ல ஓர் உறவு பூத்தது.
உனக்காகவே ஒரு ரகசியம் - சத்குரு ஜக்கி வாசுதேவ்.