இராமனை கதையின் நாயகனாக வைத்து எழுதப்பட்ட இராமாயணம், இதிகாசங்களுள் ஒன்றாக போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இராமயணத்தினை முன்வைத்து எழுதப்படுகின்ற நூல்கள் ஏராளம். அவற்றில் சில இராமாயணத்தில் சொல்லப்பட்டவைகளில் சில மாற்றங்கள் செய்து சுவாரசியம் கூட்டி எழுதப்படுகின்றன.
அவ்வாறு இராமாயனத்தின் நாயகியான சீதையை முன் வைத்து சி. ஜெயபாரதன் எழுதியுள்ள நாடகமே இந்நூல். இதில் இராமன் முதல் அனைவருமே மனிதர்களாக கொள்ளப்படுகிறார்கள். சீதா படுகின்ற துன்பத்தினை பிரதானமாக வைத்தே இந்நூல் செல்கிறது என்பதால் புதுவிதக் கோணம் நமக்கு கிடைக்கும்.
ஆசிரியர் இந்து மதத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர் என்பதால் சில விசயங்கள் இந்துகளை வருத்தவும் செய்யலாம். ஆனால் இராமாயணம் குறித்தான மாற்றுப் பார்வை வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கு இந்நூல் மிகவும் பிடிக்கும்.
சீதாயணம் மின்னூலை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.
நன்றி.
அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்
