தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search
Showing posts with label children. Show all posts
Showing posts with label children. Show all posts

May 6, 2010

மழலையர்களுக்கான சிறுகதைகள்.














மாணவர்களுக்கான சிறுகதைகளை மாணவர்களே எழுத வேண்டும் என்று எண்ணி 4 5 ஆம் வகுப்பில் தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளியில் படிப்பவர்களிடம் சொன்னதன் விளைவாக உருவானதே இந்தக் கதைகள்.

சிறுவர்களின் மனதில் இயல்பாக எழுகிற நினைவலைகளுக்கு, வடிவம் தந்து, ஒவ்வொரு கதையின் இறுதியிலும் ஒரு வழிகாட்டுதலை இணைத்து உருவாக்கப்பட்டவையே இக்கதைகள். நன்றி திரு பொள்ளாச்சி நேசன்.



இதில் அமைந்துள்ள எளிதான வரத்தைப் பிரயோகங்களும், இயல்பான குழந்தைகள் பேசும் மொழிகளும் நாம் நம் குழந்தைகளிடம் கதை கேட்பதுபோல் உள்ளது. கண்டிப்பாக குழந்தைகள் விரும்பிப் படிப்பார்கள்.

மழலையர்களுக்கான சிறுகதைகள்.

இத்தொகுப்பில் 21 சிறுகதைகள் உள்ளன. இதுபோல இன்னும் நிறைய சிறுகதைகளை மாணவர்களிடமிருந்து மாணவர்களுக்காக உருவாக்கவேண்டும்.





Click to download.

Apr 4, 2010

விக்கிரமாதித்தன் கதைகள்




















வேதாளக் கதைகள் இருபத்துநான்கும் இரண்டாவது பதுமையாகிய மதனாபிஷேகப் பதுமை சொன்னவை ஆகும். இதில் பதுமைகள் சொல்லும் கதைகள் விக்கிரமாதித்யனின் அறிவு ஆற்றல் பராக்கிரமங்களைப் பறைசாற்றும் விதமாக உள்ளன. ஒவ்வொரு பதுமையும் ஒற்றைக்கதையாகச் சொல்லவில்லை. ஒரு கதை ஆரம்பித்து கதைக்குள் கதைக்குள் கதைக்குள் கதை என்கிற பாணியில் சொல்வதால் மொத்தப் புத்தகத்தில் பல நூறு கதைகள் உள்ளன. விக்கிரமாதித்தன் கதைகள் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளன.



தொடர்புடைய ஆலயம்


திருச்சியில் மகாகாளிகுடி ஊரில் இருக்கும் உஜ்ஜைனி மகாகாளி அம்மன் ஆலயம் விக்கிரமாதித்தன் கதைகளுடன் தொடர்புடைய ஆலயமாக விளங்குகிறது.


பின்னணி


காளி தேவியின் பக்தனான விக்கிரமாதித்தன் வடநாட்டில் உள்ள உஜ்ஜைனியை ஆண்டு வந்தான். ஆறுமாதம் நாடு, ஆறு மாதம் காடு என்று அவன் ஆண்டுவந்த அவன், காடாறு மாத சமயத்தில் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வான். ஒரு முறை தெற்கே வந்தான்.கையோடு தான் கொண்டு வந்த காளி தேவியைக் காவிரிக்கரையில் வைத்துப் பூஜித்து வந்தான். அந்தக் காளி தான் திருச்சியில் மகாகாளிகுடி ஊரில் குடியிருக்கும் உஜ்ஜைனி மகாகாளி அம்மன்.


தன்னை தினமும் பூஜித்த விக்கிரமாதித்தனிடம் காளி ஒருமுறை, "இங்கிருந்து இரண்டுகல் தொலைவில் ஒரு சிவாலயம் உள்ளது. அந்த சிவன் கோவிலில் உள்ள முருங்கை மரத்தில் ஒரு வேதாளம் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை நீ கீழே இறக்கினால் அது உனக்கு முப்பத்திரண்டு கதைகளையும் உன் வாழ்வுக்கு வர இருக்கும் யோக ரகசியங்களையும் சொல்லும். அதன்படி நடந்து நீ உன்னத பதவியைப் பெறு" என்று கூறி மறைந்தாள்.
காளிதேவியின் கட்டளைப்படி அங்கு சென்ற விக்கிரமாதித்தன் வேதாளம் கூறிய முப்பத்திரண்டு கதைகளுக்கும் விடை கூறி அதற்கு சாப விமோசனம் அளித்தான்.


சிவாலயத்தின் பின்னணி


பழங்காலத்தில் அந்தக் கோவிலின் அர்ச்சகர், சிவனுக்கும் பார்வதிக்கும் பொங்கல் நைவேத்தியம் செய்து விட்டு மறதியாக அதைக் கோயிலின் உள்ளேயே வைத்துப் பூட்டி விட்டு வீட்டுக்குப் போய் விட்டார். வீட்டில் அர்ச்சகரின் மனைவி, 'பொங்கல் எங்கே?' என்று கேட்டபிறகு தான் ஞாபகம் வந்தவராக மீண்டும் கோவிலுக்குப் போயிருக்கிறார். பூட்டியிருந்த கர்ப்பக்கிரகத்தின் உள்ளே இருந்து பேச்சுக் குரல் வர, சாவித்துவாரம் வழியே உள்ளே பார்த்திருக்கிறார்.


உள்ளே சிவபெருமான் பார்வதி தேவிக்கு முப்பத்திரண்டு கதைகள் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார். அர்ச்சகர் ஒட்டுக் கேட்பது தெரிந்ததும் சிவபெருமான் கோபம் கொண்டு அர்ச்சகரை வேதாளமாக்கி முருங்கை மரத்தில் தொங்கும் படி சபித்து விட்டார்.


விமோசனம் கேட்டுக் கதறிய அர்ச்சகரிடம் "நீ வேதாளமாகத் தொங்கும் போது ஒருவன் உன்னைக் கீழே இறக்குவான். அவனிடம் நீ கேட்ட எல்லாக் கதைகளையும் சொல்லி விடை கேள். அனைத்துக் கதைகளுக்கும் விடை சொல்பவன் தான் விக்கிரமாதித்தன். அவனிடம் அடிமையாக இருந்தபிறகு என்னை வந்தடைவாயாக" என்று சொல்லி மறைந்தார் சிவபெருமான்.



மேலும் தெரிந்துகொள்ள --தமிழ் விக்கிபீடியா

Part 1



Click to download.



Part 2



Click to download.

Oct 24, 2008

குழந்தைகள் பாடல்கள்














உங்கள் குழந்தைகளுக்காக நாம் கேட்டு மகிழ்ந்த பாடல்கள் சொல்லிக்கொடுக்க நினைத்தாலும் மறந்துவிட்டதா இதோ நமது நினைவுகளை மீட்டுக்கொண்டு வருவதற்காக இந்த பாடல்கள்.


அம்மா இங்கே வா வா!
ஆசை முத்தம் தா தா!
...................

நிலா நிலா ஓடி வா
...................

ஒன்றும் ஒன்றும் இர‌ண்டு

......................

ம‌ற்றும் ப‌ல‌

Click to download.

Oct 9, 2008

முல்லாவின் கதைகள்










முல்லா நஸ்ருத்தீன் என்பது அவருடைய முழுபெயர். இதில் முல்லா என்பது அறிக்ஞர் ‍கல்விமான் என்பதைக் குறிக்கும் சிறப்பு அடைமொழியாகும். இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் ஆவார்.

முல்லா நஸ்ருத்தீன் சிற‌ந்த கவிஞர், சிறந்த நகைச்சுவையாகக் கவிதை எழுதுவதிலும் பேசுவதிலும் வல்லவர் ஆவார். இவருடைய இந்த புகழுக்கு அவர் எழுதிய கதைகள் சான்றாகும். இவருடைய கதைகள்யாவும் அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை ஒட்டியதக இருந்தது.


Click to download.

Sep 20, 2008

மரியாதை ராமன் கதைகள்















இக் கதையில் வரும் மரியாதைராமன் பல சிக்கலான வழக்குகளையும் விசாரித்து தன் அறிவுத் திறமையால் சிறப்பாக நீதி வழங்கியிருகிறான்.



Right click and "Save target as" to your desired location.


முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts