
காதல் என்பதில் காமம் இருப்பினும்
காமம் என்பதில் காதல் சுத்தமாக இல்லை!!!எங்கோ படித்தது.....
இதை படிக்கும் எவரும் 'உணவு, தூக்கம்' போலவே பலுனர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை இந்த உறவில்தான்முழுமை பெறுகிறது.
இந்த உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை! நமது ரிஷிகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பது வருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம் புரிந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின் முழுமையான பரிமாணத்தை நமது முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் களத்தில் நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எரிந்து, பாலுணர்வு என்பதையே ஒரு மிகப் பெரிய கவர்ச்சி அம்சம் போல ஆக்கி ' ஒருவனுக்கு ஒருத்தி' என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது டேக் இட் ஈசி' கலாசாரத்தை நமக்கும் விதைத்து விட்டனர்.
click to download.

