
அன்பு நண்பர்களே!,
சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் சம்போ சிவ சம்போ மென்நூலை இங்கு சொடுக்கி பதிவிரக்கம் செய்து படித்து மகிழுங்கள்.
புத்தாண்டு வாழ்த்துகள்.
அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/
This blog try to bring available Tamil e-books in one place.









வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று
வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு
உருண்டயும் உருளுதடி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி - இது
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்
வாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி.






வளர்ந்து வரும் எழுத்தளாரான ஜெய்சக்தி அவர்களின் நாவல்களைப் படிப்பதால் மனவளர்ச்சியும், மன அமைதியும் ஏற்படுகிறது. வரும்கலத்திற்கான ஆக்க பூர்வமான கருத்துக்களும், சிந்தனைகளும் எதிர்கால வாழ்க்கையின் வெற்றிக்கு வித்திடுகிறது என்பது வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுக்கள்.
தொடர்ந்து வெற்றிப்பாதையில் நடைபோடும் இவரின் 25 வது நாவல் இது.
படித்து மகிழ்ந்து பாராட்டுங்கள்.
Part -1
Click to download.
Part -2




காதல் மட்டும் தான் கவிதையின் களமாக பெரும்பாலும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன, வெகு அரிதாக நட்பும். இந்தக் கவிதைத் தொகுப்பில் உருக அவருக்கு ஒரு நட்பு கிடைத்திருக்கிறது.
கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும் பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்....
கனவில் கூட
என்னைக்
கிள்ளிப் பார்க்கும்
இந்தச் சுரப்பிகள்
உன்னைக்
கண்டதும் எப்படி
இவ்வளவு
இயல்பாய்
தூங்கிவிடுகின்றன.....
தேர்வு முடிந்த
கடைசி நாளில் நினைவேட்டில்
கையொப்பம் வாங்குகிற
எவருக்கும் தெரிவதில்லை
அது ஒரு நட்பு முறிவிற்கான
சம்மத உடன்படிக்கைஎன்று.....
தூங்கு என்று மனசு சொன்னதும்
உடம்பும் தூங்கிவிடுகிற
சுகம்
நட்புக்குத்தானே வாய்த்திருக்கிறது...
இத்தகைய நட்பு சத்தியமா? அவரே சொல்கிறார்.....
காமத்தாலான
பிரபஞ்சத்தில்
நட்பைச்
சுவாசித்தல்
அவ்வளவு
எளிதன்று...
கொஞ்சம் குற்ற உணர்ச்சி வருகிறது.......
...என்றுமே எனக்கு மக்களை, குறிப்பாக இளைய சமுதாயத்தைச் சந்திப்பதில் மிகவும் விருப்பம் உண்டு. இதுவரை என் வாழ்நாளில் பல பள்ளிகளுக்குச் சென்று அன்றலர்ந்த மலர்களைப் போல் இருக்கும் குழந்தைகளைச் சந்தித்து அவர்களிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி இருக்கிறேன். கிட்டத்தட்ட 1 கோடி மாணவர்களை சந்தித்து அவர்களிடம் உரையாடி, அவர்கள் என்னுடன் சேர்ந்து உறுதிமொழி ஏற்றுள்ளார்கள். என்னையே புதுப்பித்துக் கொண்ட தருணங்கள் அவை.
2020 -ம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்னாலே கூட, இந்தியா ஒரு வளர்ந்த நாடு ஆகும் என்பது என் கனவு மட்டுமல்ல, ஆதாரங்களைக் கொண்ட நம்பிக்கையும் கூட. இந்த நம்பிக்கைகள் எப்படி ஏற்பட்டன என்கிற தாக்கங்கள் இளைய சமுதாயத்தைச் சென்றடைந்தால் எப்படி இருக்கும் என்று நான் எண்ணியதன் விளைவே, உங்களுடன் நான் உரையாடப் போகும் இந்தத் தொடர்....
.....என்னை நோக்கி தள்ளாடிய உருவத்துடன் நடந்து வந்தார் ஒரு 65 - 70 வயது மூதாட்டி. அருகில் வந்தவர் என் கரத்தைப் பற்றிக் கொண்டார். "கலாம், கடல்தான் எங்கள் வாழ்க்கை.. உயிர்.. எல்லாமே.. ஆனால் இப்படி நடந்துவிட்டதற்காக நாங்கள் கடலைக் கண்டோ, அதன் பிரமாண்டமான சுனாமி அலைகளைக் கண்டோ பயப்படவில்லை.. எங்களின் வெற்றிக்கான போராட்ட உணர்வு, சுனாமி ஏற்படுத்தக் கூடிய தோல்வி உணர்வை ஜெயித்து விட்டது''.. .....
.....தீரத்துடன் போரிட்டு உயிர் துறந்த ஜவான்களுக்கான அஞ்சலியாக அமர்ஜோதி ஜவானில் நான் படித்த கவிதை.
எங்கள் இதயத்தில் உங்களின் வீரத்தினால் விளக்கேற்றுங்கள்
அதன் கனல் தேசமெங்கும் பரவட்டும்
உங்கள் தியாகத்தின் செய்தி நாடெங்கும் செல்லட்டும்
அது எமது நம்பிக்கையை மேலும் தெம்பூட்டும்.......
படிக்க படிக்க நமது மனதில் உத்வேகமும் உற்சாகமும் பற்றிக்கொள்கிறது,
ஐயா!
நீவீர் இந்நாட்டில்
இறக்காத வரம் வேண்டும்,
இறந்தாலும், இம்மண்ணில்
விருட்சத்தின் விதைகளாய்
வீதியெங்கும் விழவேண்டும்....
தெருவெங்கும் அறிவு விளக்கை ஏற்றிச் செல்லும் ஒரு தலைவனுடன் பயணம் செய்ய நக்கீரனில் வந்த தொடர்; ஒரு மென்புத்தகமாக நமது வலைப்பூவில்.
புத்தகத்தை மின்னஞ்சலில் அனுப்பிவைத்த நண்பனுக்கு நன்றி.
Click to download.

Click to download.

Click to download.
வெளிநாட்டில் தம் சொந்தங்களை விட்டு வெகுதூரம் வாழும் நம் தமிழ் நெஞ்சங்களுக்காக ஏராளமான சமையல் குறிப்புகளை அள்ளிக்கொடுக்கும் தளங்கள் இருக்கிறது. அதில் மிகவும் முக்கியமானது அறுசுவை டாட் காம் இனிய தமிழில் ஒரு சமையல் இணையதளம்.
என்னதான் இணையதளத்தில் படித்தாலும், குடும்பங்களை நாட்டில் விட்டுவிட்டு தனியாக இருக்கும் பேச்சிலர்களின் சமையல் தனி ரகம் தான்.
அதுவரை சமையலறைப் பக்கமே போகாமல் இருந்த நான், முதல் முதலாக குடும்பத்தை விட்டு தனியாக செல்லும்போது சாப்பாட்டிற்கு என்ன செய்வேன்
என்பதே மிகப்பெரிய விசயமாக இருந்தது. ஒன்றுமே தெரியாத தம்பி எளிதாக சமையல் செய்ய என் சகோதரி கொடுத்த சில குறிப்புகளை மற்றவர்களுக்கு
பயன்படும் என்ற எண்ணத்தில் இல்லாவிட்டாலும் என் சொந்த சேமிப்பிற்காக பதிவிடுகிறேன்.
ரவா தோசை.
ரவை ஒரு டம்ளர் எடுத்து அரைமணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் அதே அளவு மைதா மாவு எடுத்து உப்பு சேர்த்து தோசை பதத்திற்கு நன்கு கரைத்துக்கொள்ளவும். ரவையை நன்கு பிசைந்துவிட்டுப் பின் மைதா சேர்த்தால் நன்றாக இருக்கும். ஒரு மிளகாய், இஞ்சி, கடுகு உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து மாவில் கொட்டி கிளறிவிட்டு தோசை செய்தால் நன்றாக இருக்கும். இதுவரை செய்து பார்த்திராத பேச்சிலர்கள் முயற்சித்துப் பாருங்கள் எளிதாக செய்யலாம்.
நித்தமும் உன் நினைவு காஞ்சனா ஜெயதிலகர்
Click to download.
சதுரகிரி மலைக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கும் ஊரில் பிறந்திருந்தாலும், சிறுவயதில் இரண்டு மூன்று முறை சென்றுவந்திருந்தாலும் அதனுடைய உண்மையான சிறப்புகளையும் அற்புதங்களையும் அறிந்ததில்லை.
சமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோது சதுரகிரியின் சிறப்புகளை சொல்லும் ஒரு புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. அதுமுதல் யார் சதுரகிரியின் சிறப்புகளை சொன்னாலும் எங்களுருக்குப் பக்கத்தில் தான் இருக்கிறது என்று சொல்லுவதில் ஒரு இனம் தெரியாத சந்தோசம்; இருந்தாலும் அதன் உண்மையான அற்புதங்களை உணர்ந்தவனில்லை என்ற குற்ற உணர்வு எனக்குள் வருவதை தவிர்க்க முடியவில்லை.
இன்று வாழ்க்கையின் ஓட்டத்தில் வெகுதூரம் வந்துவிட்டாலும் அந்த மலையின் அடிவாரமாகிய தாணிப்பாறைக்கு சென்ற மாட்டுவண்டிப் பயணங்களும், அங்கிருக்கும் வழுக்குப்பாறையில் சருக்கிவிளையாடி கிழித்துக்கொண்ட டவுசர்களும்... ம்...ம்...
சதுரகிரியின் அற்புதங்களையும், போகத்தேவையான வழிகாட்டுதல்களையும் நண்பர் பிரபாகரன் அவர்கள் பதிப்பித்துக்கொண்டிருக்கிரார். இங்கு சென்று பாருங்கள்.
நீண்ட நாட்களுக்கு முன்பு kricons தனது வலைப்பூவில், சக்தி விகடனில் வந்த தொடரை தொகுத்து மென் புத்தகமாக கொடுத்திருந்தார். நல்ல புத்தகங்களை ஒரே இடத்தில் சேமிக்கும் முயற்சியாக இதோ நமது வலைப்பூவிலும்.
தொகுத்த kricons அவர்களுக்கு மிக்க நன்றி.
Click to download.
![]()
நமக்குக் கடவுளைப் பற்றியாவது, மதத்தை பற்றியாவது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்கி அவர்களுக்கு அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவைகளில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து விடுதலையை உண்டாக்கவேண்டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும் அநேக தடவைகளில் வெளியிட்டிருக்கிறோம்.
அதுவும் பலர் நம்முடைய இம்முயற்சியில் கடவுளையும், மதத்தையும் கொண்டுவந்து குறுக்கே போட்டுவிட்டதால்தான் நாம் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டியதாயிற்றேயொழிய உண்மையில் கடவுளையும், மதத்தையும் பற்றிப் பேசவேண்டும் என்கின்ற அவசியத்தையோ, ஆசையையோ கொண்டு நாம் அதில் பிரவேசிக்கவில்லை.
.......மனிதன் உலகத் தோற்றத்திற்கும், நடப்பிற்கும், சம்பவங்களுக்கும் காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில், கடவுள் சக்தி என்றும் கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்வதும், உதாரணமாக அவற்றிற்குக் காரணகாரியம் தோன்றிய பின்பு, அந்நினைப்பு கொஞ்சம கொஞ்சமாக மாறிவிடுவதும் சகஜம் என்பத்தாகக் குறிப்பிட்டு இருக்கிறோம்.......
.........மதம் மக்களைக் கொழைகளாக்குகின்றது. மதத்தினால் இவ்வளவு அநீதிகள் ஏற்பட்டும், உலக சம்பவங்களின் உண்மைக் காரணகாரியங்கள் உணர்வதர்கில்லாமல், நிர்பந்தமாய் மக்கள் மதத்தினால் தடுக்கப்படுகின்றார்கள். .....
.....உண்மைச் சைவன் என்பவன் ஒருவன் எவ்வளவு அயோக்கியனானாலும், ஒரு துளி சாம்பல் அவன் மேல்பட்டு விட்டால் உடனே அவனுடைய சகல பாவமும் தீர்ந்து நேரே "கைலையங்கிரிக்கு"ப் போய்விடலாம் என்கிறான் என்றால் சிவனின் யோக்கியத்திற்கும், சைவ சமையத்தின் பெருமைக்கும் வேறு சாட்சியம் தேவையா?.....
படித்தால் கிடைக்கும்; மதங்களின் மற்றொரு பரிணாமம்..
Click to download.

படிக்கும் காலங்களில் என்னைப் பாதித்த எழுத்தாளர் சுஜாதா. அவரது என் இனிய இயந்திராவைப் படித்துவிட்டு மீண்டும் ஜீனோவிர்ககாக அலையோ அலை என்று அலைந்திருக்கிறேன். அவருடைய ஜிட்டு (சரியா?) சிறுகதையை வாசித்துவிட்டு அந்த குழந்தைக்கு என்ன ஆனதோ என்ற அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இரண்டு மூன்றுநாட்கள் ஆகியது. இன்று நினைத்தாலும் மனதை என்னவோ செய்யும் சிறுகதை அது.
பிரிவோம் சந்திப்போம் பாகம் 1 ஐ ஒரே நாளில் படித்துவிட்டு பாகம் 2 க்காக அலைந்து திரிந்து ஒரு முடிவுசெய்தேன் இனிமேல் பரிட்சை காலங்களில் சுஜாதாவின் புத்தகங்கள் படிக்கக்கூடாது என்று( அது புதுவருட சத்தியம் போல ஆனது வேறு கதை). பிறகு ஒரு நேரத்தில் பிரிவோம் சந்திப்போமின் இரண்டாம் பாகம் படித்து வெளிநாட்டில் வேலைக்கே போகக்கூடாது என்று முடிவுசெய்தேன் (இப்போது வெளிநாட்டில் தான் வேலை செய்கிறேன்!!).
ஏன் எதற்கு எப்படி புத்தகம் ஒரு சொத்தாக என்னிடம் இருக்கிறது. வேறு எதையோ இணையத்தில் தேடியபோது மென்புத்தகமாக கிடைத்தது பதிவிட்டுவிட்டேன். என்னதான் இருந்தாலும் அந்த புத்தகத்தில் படிக்கும் திருப்தி மென்புத்தகமாக படிப்பதில் எனக்குக் கிடைக்கவில்லை.
Click to download.
பொங்கலோ பொங்கல் ...
இனிய
